செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டோம்

மதுராந்தகம், ஜனவரி 24: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். கடந்த கருத்து வேறுபாடுகளை மறந்து இனி ஒன்றாக செயல்படுகிறோம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, சீரழிவு நிறைந்த நிர்வாகத்திற்கு முடிவு காணும் […]

Loading

செய்திகள்

உத்திரமேரூரில் அண்ணா திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநிநோயகம்

காஞ்சிபுரம் ஜன. 12– காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் உத்திரமேரூர் பஜாரில் தொழில் நிறுவனங்கள் , சிறு கடைகள் , வியாபாரிகள் , பொதுமக்கள் ஆகியோரிடம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் […]

Loading

செய்திகள்

அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின் வீரபாண்டி பிரச்சாரத்தில் எடப்பாடி தாக்கு

சேலம், ஜன. 5: ’’அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி பிரதான சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை. சேலம் மாவட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களே சாட்சி. அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் […]

Loading

செய்திகள்

போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: எடப்பாடி குற்றச்சாட்டு

திருவள்ளூர், டிச. 30: தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருத்தணி தொகுதியில் எழுச்சியுரை ஆற்றினார். இதையடுத்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் – ஊத்துகோட்டை சாலை புதிய பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘’அண்ணா திமுக கூட்டணி அடுத்தாண்டு […]

Loading

செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் : எடப்பாடி குற்றச்சாட்டு

திருத்தணி, டிச. 30: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினார். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் […]

Loading

செய்திகள்

‘‘மக்கள் சக்தியால் ஆட்சிப் பீடத்தில் விஜய்’’: செங்கோட்டையன் உறுதி

சென்னை, நவ. 28: ‘‘அடுத்த ஆண்டில் (2026) மக்கள் சக்தியால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்’’ என அதன் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உறுதிபடக் கூறியுள்ளார். அண்ணா திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்..தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி: 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

 திருச்சி, ஜூலை 27– திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை […]

Loading

செய்திகள்

ராஜ்ய சபை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவி ஏற்றார்

தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் புதுடெல்லி, ஜூலை 25– கமல்ஹாசன் உள்பட 4 பேர் ராஜ்ய சபை எம்.பி.யாக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபை) தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், […]

Loading