Uncategorized செய்திகள்

இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு

நாசா, ஜன. 21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது. அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை படித்த […]

Loading

Uncategorized

4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 20: தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. 4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் […]

Loading

Uncategorized

ராணிப்பேட்டையில் 28–ந் தேதி முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகள்: அமைச்சர் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை, ஜன. 14– ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் 28–ந் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை கட்டுவதற்கான முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அமைந்திட தமிழ்நாடு அரசின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலை அமைவதற்கான […]

Loading

Uncategorized

17வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, ஜன. 11: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர்ந்து 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ் டிஏ) சார்பில், கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நேற்று 16-வது நாளாக சென்னை எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அங்கு வருவதற்காக […]

Loading

Uncategorized செய்திகள்

அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 3: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜே.சி.டி. பிரபாகர். இவர் 1980, 2011-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். அதிலும் 2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் மறைந்த பேராசிரியர் அன்பழகனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அண்ணா தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், […]

Loading

Uncategorized

தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்

புதுடெல்லி, டிச. 15: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. இதில் பாஜகவைப் பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருவதாகத் தகவல்கள் […]

Loading

Uncategorized

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை, டிச. 5– திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை 9–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ள வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதேசமயம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில்தான் முறையாக தீபம் ஏற்றவேண்டும் எனவும், அதனை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் ஹிந்து தமிழர் கட்சி […]

Loading

Uncategorized

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு: திருப்பரங்குன்றம் மலையில் ஐகோர்ட் நீதிபதி ஆய்வு

திருப்பரங்குன்றம், நவ. 20: தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூண், விநாயகர் கோயில் அருகே அமைந்துள்ள மண்டபம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதத்தில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். மலை மேல் […]

Loading

Uncategorized

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் பரபரப்பு கடிதம்

சென்னை, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள். * தமிழக வெற்றி கழகம் சார்பாக உங்கள் அவசரமான தலையீட்டை நாடி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி தெளிவான மற்றும் உணர்த்தக்கூடிய வரையறைக்குட்பட்ட வருகை மற்றும் செயல்பாடுகளை நிறுவியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் […]

Loading

Uncategorized

சர்க்கரை நோய் பரிசோதனை: ஆர்த்தி ஸ்கேனில் நாளை வரை இலவசம்

சென்னை, நவ.15– ஆண்டுதோறும் நவம்பர் 14–ம் தேதி உலக நீரிழிவு தினத்தைக் குறிக்கும் வகையில், நாளை (-16–ந் தேதி) வரை மும்பை, சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, ஆமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும் சிறப்பு “சர்க்கரை இல்லாத இந்தியா” நீரிழிவு விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனத்திலும் நடத்தப்படுகிறது. 14–ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மட்டும், இலவச சர்க்கரை சோதனை, ரூ.99 கட்டணத்தில் HbA1c சோதனை, […]

Loading