சிறுகதை விழாக்கள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவுகள் சில நிஜங்கள்… வத்சலா சிவசாமி

பார்த்தீபனும் பிரபுவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்ப கல்வியில் இருந்தே இருவரும் சேர்ந்தே படித்தார்கள். அவர்கள் படித்த அந்தப் பள்ளி சரித்திரப் புகழ் வாய்ந்தது. தமிழ் மீடியத்தில்தான் இருவரும் படித்தார்கள். பள்ளி இறுதித் தேர்வுக்குப் பின் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது பல மாணவர்களோடு சேர்ந்தே ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். பி.எஸ்ஸியில் படிக்கும்போது கணினியை முதலாம் பாடமாக எடுத்திருந்தார்கள். தான் […]

Loading

சிறுகதை விழாக்கள்

யானையூட்டு விழா..! விழா 23 – ராஜா செல்லமுத்து

நேற்று வரை, கோயில்களில் அடைந்து கிடந்த யானைகளுக்கு இன்று முதல் சில நாட்களுக்கு விடுதலை. சந்தோஷத்தின் உச்சிக்குப் போன யானைகள் தன் அகலக் காதுகளை இன்னும் கொஞ்சம் அகலமாய் விரித்து சர் சர் சர்ரென வீசிக் கொண்டிருந்தன. தன் தந்தங்களைத் துதிக்கை கொண்டுத் தடவிப் பார்த்துக் கொண்டன. தூண் போன்ற தன் கால்களை அப்படியும் இப்படியுமாய் ஆட்டிக் கொண்டிருந்தன. இருப்பிடம் விட்டு வேறு இடம் போகத் தயாராக இருப்பதால், சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்து புத்துணர்ச்சி விழாவிற்குப் […]

Loading

சிறுகதை விழாக்கள்

நடுகல் விழா…! விழா 22…….. ராஜா செல்லமுத்து

டகு…. டகு… டொம்.. டொம்..டகு…. டகு… டொம்.. டொம்.. என்ற உடுக்கைச் சத்தம் அந்தப் பகுதியைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. தன் வலது கையில் உடுக்கையைப் பிடித்து, ஈ…. ஈ… ….ஈ… என்று கரை விழுந்த தன் பற்களை நறநறவெனக் கடித்தபடியே ஒரு விதமான கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உடுக்கையை அடித்துக் கொண்டிருந்தார், ஒரு பெரியவர். அந்தச் சத்தத்தைக் கேட்ட ஆட்களுக்கு நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது. இன்னதென்று சொல்ல முடியாத சோகத்தில் தன் இரு கைகளையும் எடுத்துக் […]

Loading

சிறுகதை விழாக்கள்

இசை விழா…! விழா 21

வாசலின் வெளியே ஆடம்பரமான அலங்காரத்தில் பந்தல், வாழைமரம், சீரியல் பல்புகள் என்று அமர்க்களமாகப் போடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கான இசை விழாவின் பெயர் பட்டியலை ஒட்டியிருந்தார்கள் அத்தனையும் வாயில் நுழையாத ராகங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்கள். பாடும் ஆள், பாடுகிறவர்களின் பெயர்கள் என்று அரங்கத்தின் முன்னால் இருந்ததைப் படித்துப் பார்த்து ” எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் ?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள் அன்று விழாவிற்கு வந்தவர்கள் . அன்று, ஐந்தாவது நாள். கர்நாடக சங்கீதத்தில் கரை கண்ட […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கனகாபிஷேக விழா..! விழா 20 …. ராஜா செல்லமுத்து

மயிலாடும்பாறை கிராமத்தில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாரும் கண்டதில்லை. ஊரின் தொடக்கத்தில் இருந்து ஊர் முடியும் வரை கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், ஆட்கள் திரும்பிய பக்கமெல்லாம் வாழை மரங்கள், தோரணங்கள், குழாய் ரேடியோவில் பாடல்கள் என்று கிராமமே சந்தோசத்தில் நிறைந்திருந்தது. உயர்தரக் கார்கள் முதல் உள்ளூர் கார்கள் வரை வந்து கொண்டிருந்தன. அந்த ஊருக்குப் புதிதாக வந்த பரமனுக்கு எதுவும் விளங்கவில்லை. ” என்ன இது? ஊரே திருவிழாக் கோலமா இருக்கு? சாமி கும்பிடு எதுவும் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … குட முழக்கு விழா…! விழா 19 …. ராஜா செல்லமுத்து

வானம் சாட்சியாக, பூமி சாட்சியாக அத்தனை தெய்வங்களின் சாட்சியாக நடக்கத் தயாராக இருந்தது, கடற்கரையில் அமைந்த திருக்கோயிலின் குடமுழுக்குத் திருவிழா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும் புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்திருந்தனர், புண்ணியத் தலங்களிலிருந்து வந்த ஆன்மீகவாதிகள். கோயில் முழுவதும் பந்தல் போடப்பட்டு, ஆங்காங்கே சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , அவர்களின் பக்திப் பேச்சில் மயங்கிக் கிடந்தனர் பக்தர்கள் . ஆன்மீகம், சொற்பொழிவு இது எதையும் கவனிக்காமல் தங்கள் வியாபாரம் மட்டுமே […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசிம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தள்ளுபடி விழா..! விழா 18 …. ராஜா செல்லமுத்து

ஆடி மாதம் ஆனாலே தெருத் தெருவுக்கு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள் வியாபாரிகள். தக்காளி முதல் தங்கம் வரை அத்தனையும் இந்தத் தள்ளுபடியில் அடங்கும். ” என்ன புவனா ,இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில துணிமணிகள் நிறைய வாங்கலாமா ? “ஆமா கெளசல்யா, எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில அதிகமான ஜவுளிகள் வர்றதா சொல்றாங்க. “ “ம்…ஆடித் தள்ளுபடி விற்பனைன்னு விளம்பரம் போட்ட முதல் தேதியிலேயே நாம போனம்னா, நல்ல நல்ல ஜவுளிகள அள்ளிட்டு […]

Loading

கதைகள் சிறுகதை

நாய் பாசம் ! – டிக்ரோஸ்

அன்றும் காலை எப்போதும் போல் ராகவி கோடம்பாக்கம் மின் ரயில் நிலைய வாசல் நடைபாதையில் நளினமாக தன் பலூனாய் விரிந்த ஆடையை தன் நளினமான கைகளால் அமுக்கி விட்டபடி அமர்ந்த நொடியில் நடனதாரகைகளே மெய்மறந்து ரசிக்கும் வசீகரத் துள்ளலுடன் அவள் அருகே தத்தித் தாவி வந்தது அந்த நொ‘‘ன்’’டி நாய், ஆம் சற்றே குறைபாடு என்பதால் இந்த சின்ன ‘ன ‘ ! அந்த வீதியில் தினமும் இரட்டிப்பாகிக் கொண்டு இருக்கும் வாகன நெரிசல் சூழலில் ஸ்கூட்டர்கள், […]

Loading