செய்திகள் நாடும் நடப்பும்

அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, நவ.17: சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்தும், அம்பத்தூர், பானு நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் முன்னேற்றப் பணிகள் குறித்தும் மற்றும் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா ஆகிய பணிகளின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டிரினிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவெல் ஆஃப் இந்தியா–2025

நிகழ்ச்சி நிரல் துவக்கம் மாளவிகா சுந்தர், முரளி ராகவன் இரவு 7.20 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு விருதுகளை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு பரத நாட்டிய குரு அனிதா குஹா நாட்டியம், கடம் டாக்டர். எஸ். கார்த்திக், 8.20 மணிக்கு வாய்ப்பாட்டு என்.ரவி, சிறப்பு விருந்தினராக டி.எஸ். திருமூர்த்தி கலந்து கொள்கிறார். இரவு 8.45 மணிக்கு மக்கள்குரல் – டிரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் நன்றி கூறுகிறார். விருது பெறுபவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது : […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்களின் 25 உலக சாதனை முயற்சி – தலைமை ஆசிரியர் புனிதா உரை

வேலூர் நவ. 17: வேலூர் பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்கள் உலக சாதனை 2025யின் கீழ் 25 உலக சாதனைகளை தங்களின் தனித் திறமைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அதனையொட்டி 22ந் தேதி வரை நிகழ்த்த உள்ளனர் என பள்ளி தலைமை ஆசிரியர் பொங்கல் புனிதா கூறினார். இது குறித்து பள்ளி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ‘‘இப்பள்ளி வேலூர் காட்பாடி அடுத்த மெட்டு குளம் பகுதியில் சிபிஎஸ்இ பிட்ஜி குளோபல் பள்ளியை தொடங்கி வெற்றிகரமாக 5ம் ஆண்டில் அடி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கடலூர் கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

கடலூர், நவ. 17: கடலூரில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர். 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு கடலூர், நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ரஷியாவிடம் ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா

புதுடெல்லி, நவ.17- ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு முன்பே அக்டோபர் மாதம், ரஷியாவிடம் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதையடுத்து, ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷியாவின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதனால், ரஷியா புதிய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ. 17: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடா்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மட்டும் கிட்டத்திட்ட 6 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, ‘மைக்ரோ சிப்’ சென்னை மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டது

சென்னை, நவ.17: சென்னை மாநகராட்சி சார்பில் 2–-ம் கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து 552 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோ சிப்’, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு உடலில் ‘மைக்ரோ சிப்’ பொருத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வருகிற 24-ந்தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. மேலும் செல்லப்பிராணிகளின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த 4 குழந்தைகள்

சங்கராபுரம், நவ.17: சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 46). தொழிலாளியான இவருக்கு வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா(24), ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3 மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். வசந்தா […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காசா போர் நிறுத்தம்: ஆபத்தான அமைதி?

தலையங்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 10 ந்தேதி அமலுக்கு வந்தது. ஆனால், பல மீறல்கள், குற்றச்சாட்டுகள், மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அந்த அமைதி, மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்சம் கொண்ட “பெரும் அமைதி திட்டம்” மூலம் 2 ஆண்டுகளாக நீடித்த காசா போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் விளைவுகள் இன்னும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மறுசீரமைப்பு செய்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி: வலுப்பெறும் இந்திய – ரஷ்ய வர்த்தகம்!

ஆர். முத்துக்குமார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகக் கொள்கைகளை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா களம் இறங்கி விட்டது. மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வர்த்தகக் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் […]

Loading