செய்திகள் நாடும் நடப்பும்

அதிநவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.24– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டஅம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலைஞர் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபொழுது 10.4.1967 அன்று அம்பத்தூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் சேவை

சென்னை, நவ. 24: சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் திட்டத்திற்கான இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றார்

புதுடெல்லி, நவ.24: சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இன்று சூர்யகாந்த் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கடலூருக்கு வந்த உலக ஹாக்கி கோப்பை: அமைச்சர் கணேசன் காட்சிப்படுத்தினார்

கடலூர், நவ.23 தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் கடலூர், மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இளையோர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் வழங்கப்படும் கோப்பையினை விளையாட்டு வீரர்களுக்கு காட்சிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்ததாவது:– முதலமைச்சர் விளையாட்டினை மேம்படுத்திடவும், அதிகமான இளைஞர்கள் தங்களது தனித்திறன்கள் மூலம் வெற்றிபெற்றிட வேண்டும் என்பதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மேகதாது திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் 20 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் : எடப்பாடி குற்றச்சாட்டு

சேலம், நவ.22 மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனமாக உள்ளது என்றும், அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் உள்ள 20 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்றும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார், கடந்த 18-ந்தேதி அளித்த ஒரு பேட்டியில், மேகதாது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்த தொழிலாளர் விரோத சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதா : மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை, நவ.22: 5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்த தொழிலாளர் விரோத சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதா? என்று மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– “தொழிலாளர்கள் வரலாற்றில் நூறாண்டுகளுக்கும் மேலாக, உரிமைப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காலனி ஆட்சி காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களில் 15 சட்டங்களை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியது

கொல்கத்தா, நவ. 22: வங்​கதேசத்​தின் நர்சிங்டியில் என்ற பகு​தி​யில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் உணரப்பட்டது. கொல்கத்தாவில் வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்​கதேசத்​தின் நா்சிங்டி தென்மேற்கே நேற்று காலை 10 மணிக்கு 13 கி.மீ தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டாக்காவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், நவ. 22: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி நேற்று வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் (ஓவல் ஆபீஸ்) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இதுகுறித்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சேலம், நவ. 22: சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

10வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பாட்னா, நவ. 20: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய […]

Loading