செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை, டிச. 4: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 90.15 வரை சரிந்தது. இந்நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது. வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 90.43 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள் ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷங்டன், நவ. 29: ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை ரத்து செய்வதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை பல ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். ஆட்டோபென் என்பது ஒரு இயந்திர சாதனம். இது ஒருவரின் கையெழுத்தை நகலெடுத்து பல ஆவணங்களில் விரைவாக கையெழுத்திட பயன்படுகிறது. இந்த முறையை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘‘100 பிறவி எடுத்தாலும், நடிகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’: கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, நவ.29: “100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 56-வது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை, நவ. 29: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். வருகிற டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்தும் தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியில் எஸ்ஐஆர் மற்றும் இதர பணிகள் குறித்தும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘மெரீனா பீச்’ ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, நவ.28: அண்ணா தி.மு.க.வுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட புரட்சித் தலைவி அம்மாவின் 9–ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான பல்வேறு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இரட்டைக் குழந்தைகளை உயிர் பிழைக்க வைத்த ‘எம்ஜிஎம் ஹெல்த் கேர்’

சென்னை, நவ. 28: ஒரே நஞ்சுக்கொடி… ரத்த ஓட்டத்தில் மாறுபாடு… அரிதான கர்ப்பநிலை சிக்கல்களுடன் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளையும் காப்பாற்றியது எம்ஜிஎம் ஹெல்த்கேர் டாக்டர்கள் குழு. ஒரே நஞ்சுக்கொடியைப் பகிர்ந்துகொண்டதால், ஒரு குழந்தைக்கு அதிக ரத்த ஓட்டமும், மற்றொரு குழந்தைக்கு குறைந்த ரத்தமும் சென்றதால் ஆபத்தான நிலை இருந்தது. எடை அதிகமுள்ள ஒரு குழந்தை மட்டுமே பிழைக்கும் எனப் பிற மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி சாதனை படைத்திருக்கின்றனர். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உங்களுடன் ஸ்டாலின் போட்டியில் வெற்றி பெற்ற 36 பேருக்கு : அமைச்சர் சாமிநாதன் பதக்கம், பாராட்டு சான்றிதழ்

சென்னை, நவ.28– “உங்களுடன் ஸ்டாலின் போட்டிகள்” என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் நடத்தியது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 36 நபர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகளும், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சிறையில் இம்ரான்கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: உலக நாடுகள் தலையிட மகன் கோரிக்கை

இஸ்லாமாத், நவ. 28: சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமில்லை என்று அவரது மகன் காசிம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த ஆண்டுக்குள் சென்னை – திருச்சி உட்பட 6 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கம்

சென்னை, நவ. 28: சென்னை – திருச்சி உட்பட ஆறு வழித்தடங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, ரயில் பாதை, தானியங்கி சிக்னல் தொழில்நுட்ப தரம் உயர்த்தப்படும்’ என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வேயில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட ஆறு கோட்டங்களில் உள்ள, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதை, சிக்னல் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்துவது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா சிபிஐ விசாரணைக்கு 2வது நாளாக ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன் த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் 2-வது நாளாக இன்று காலை ஆஜராகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-–ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ […]

Loading