செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ந் தேதி கூடுகிறது

புதுடெல்லி, நவ.9- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாகி வருகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், இடையில் மழைக்கால கூட்டத்தொடரும், இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும். பொதுவாக கூட்டத்தொடர் குறைந்தது 25 நாட்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். கடந்த குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ந்தேதி முதல் […]

Loading

செய்திகள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 6 ஆயிரம் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி

சென்னை, நவ.9- 6 ஆயிரம் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022–2023 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும் சேர்த்து 4 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 453 […]

Loading

செய்திகள்

மாலியில் இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

பமாகோ, நவ. 8– மாலி நாட்டில் தங்கி வேலை செய்து வந்த இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நாட்டில் அல் கொய்தா மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட ஜிஹாதி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. 2012ம் ஆண்டு முதல் ஏற்பட்டு வரும் மோதல் மற்றும் வன்முறை காரணமாக இங்கு வெளிநாட்டவர்களை […]

Loading

செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 7 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

சென்னை, நவ. 8– போலி ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் ரூ.7 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, எழும்பூர் எஸ்பிஐ ஆர்ஏசிபிசி வங்கியின் கிளை மேலாளர் சேதுமாதவன், வினிதா ராஜ்புட் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மனுவில், தங்களது வங்கியில் போலி ஆவணங்கள் சமர்பித்து காம்போ வீட்டு கடனாக ரூ. 7 கோடி வரை கடன் பெற்று வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுவார் அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், நவ. 8– குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி, ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக 2026ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய குடியரசுக் கட்சி கவர்னர் மைக் டிவைன் பதவிக்காலம் 2வது முறையாக முடிவடைய உள்ளது. அவர் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட தகுதியற்றவர். தேர்தலில் வெற்றி பெறுபவர் […]

Loading

செய்திகள்

மும்பை–லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

மும்பை, நவ. 8– மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. […]

Loading

செய்திகள்

அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நவ. 8– இன்று பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 98-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘எல்.கே.அத்வானிஜி–க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உயர்ந்த தொலைநோக்குப் பார்வையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு அரசியல்வாதியான அத்வானிஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார். […]

Loading

செய்திகள்

எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில் சேவை மோடி துவக்கி வைத்தார்

* ரெயிலில் பயணித்தார்: பயணிகளோடு கலந்துரையாடினார் * குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தார் வாரணாசி, நவ.8– ‘‘எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, ‘‘இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது’’ என தெரிவித்தார். நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் மூலம் பயண நேரம் கணிசமாக குறைகிறது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மக்களிடையே […]

Loading

செய்திகள்

ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா காட்சிப்போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்:

உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் சென்னை, நவ.8– புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை பார்வையிட்டு, ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

‘‘எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசப் பேச்சு

‘‘யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்’’ சென்னை, நவ. 7– ‘‘இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக் கூட பார்க்க முடியாது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கினார். ‘‘சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற செங்குன்றம் மிசா ஏழுமலை பேரனும், பாபு–கலைவாணி தம்பதியரின் […]

Loading