செய்திகள்

மருத்துவ துறையில் 233 பேருக்கு பணி ஆணை: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.13– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 196 உதவியாளர் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்திற்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 19 திறன்மிகு உதவியாளர்–-II (பொருத்துநர்– II) பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக […]

Loading

செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ. 13– நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் மூலம் நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு […]

Loading

செய்திகள்

முயல் வேட்டைக்கு சென்ற 2 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

செங்கம், நவ. 13– திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading

செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்; உமரின் ரகசிய டைரிகள் சிக்கின

புதுடெல்லி, நவ. 13– டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உமர் எழுதியதாகக் கருதப்படும் டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அல பலாஹ் பல்கலைக்கழக டாக்டர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாக தெரிகிறது. டாக்டர் முசாமில் தங்கியிருந்த அறை எண் […]

Loading

செய்திகள்

வலுவான உறவுகளை வலுப்படுத்தும் மன நலன்: செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் பயிலரங்கு

சென்னை, நவ. 13– செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில், பள்ளியின் தாளாளர் மீனா முத்தையாவின் தலைமையில் பிரக்யா உளவியல் விழா 2025, மனித தொடர்புகள் மற்றும் பற்று என்ற கருப்பொருளில் நடந்தது. புகழ்பெற்ற மருத்துவ உளவியலாளர் டாக்டர் கீர்த்தி பாய் உரையாற்றினார். பற்றுணர்வை வளர்ப்பதில் உணர்ச்சிபூர்வமான பரஸ்பரம் மிக முக்கியமானது, நாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் நம்பிக்கை உருவாகிறது. அர்த்தமுள்ள உறவுகளுக்கு உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் பச்சாதாபம் அவசியம் என்பதை எடுத்துரைத்து, ஒரு நுண்ணறிவுள்ள உரையை நிகழ்த்தினார். செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் முதல்வர் டாக்டர் அமுதா […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானி-தமிழ் சேவை விருது

சென்னை, நவ. 13- வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழங்கப்படும் ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ராஜஸ்தானி அசோசியேசன்-தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, அதன் மதிப்புமிக்க ‘ராஜஸ்தானி–தமிழ் சேவா விருதுகள் 2026’ இன் 2வது பதிப்பை பெருமையுடன் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காகத் தனித்துவமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ஒரு முயற்சியே […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனை வளாகம் : ஸ்டாலின் திறந்தார்

சென்னை, நவ. 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக லாபகரமாக செயல்பட்டு […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரியில் பூட்டிய வீட்டில் காதலனுடன் தனிமையில் மகள்

எந்த தந்தையும் செய்ய துணியாத காரியம் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பூட்டிய வீட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மகளையும், அவரது காதலனையும், பெண்ணின் தந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார். பெண்ணின் தந்தை ஒரு கொத்தனார் ஆவார். அவரது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. அந்த இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார். தந்தை வெளியூர் சென்ற நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தந்தை வந்ததால் இருவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். பருவ […]

Loading

செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு

புதுடெல்லி, நவ.12-– பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதியும், நேற்றும் இருகட்டங் களாக நடந்து முடிந்தது. வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகள் நடத்தின. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. ஏறத்தாழ அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 243 […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, நவ.12- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் சிங் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அரசியலமைப்புச் சாசனத்தின் 14, 19, 21, 325, 326 ஆகிய பிரிவுகளையும், மக்கள் பிரதிநிதித்துவ […]

Loading