செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் 5 பேர் குழு அமைப்பு

சென்னை, நவ. 22– தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது எனவும் […]

Loading

செய்திகள்

நிலத்தகராறு: சேலத்தில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை

சேலம், நவ. 22: சேலத்தில் நிலத்தகராறில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45) விவசாயி. கிரான் காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு […]

Loading

செய்திகள் முழு தகவல்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.22: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரெயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மேகதாது திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் 20 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் : எடப்பாடி குற்றச்சாட்டு

சேலம், நவ.22 மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனமாக உள்ளது என்றும், அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் உள்ள 20 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்றும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார், கடந்த 18-ந்தேதி அளித்த ஒரு பேட்டியில், மேகதாது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்த தொழிலாளர் விரோத சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதா : மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை, நவ.22: 5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்த தொழிலாளர் விரோத சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதா? என்று மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– “தொழிலாளர்கள் வரலாற்றில் நூறாண்டுகளுக்கும் மேலாக, உரிமைப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காலனி ஆட்சி காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களில் 15 சட்டங்களை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியது

கொல்கத்தா, நவ. 22: வங்​கதேசத்​தின் நர்சிங்டியில் என்ற பகு​தி​யில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் உணரப்பட்டது. கொல்கத்தாவில் வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்​கதேசத்​தின் நா்சிங்டி தென்மேற்கே நேற்று காலை 10 மணிக்கு 13 கி.மீ தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டாக்காவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் […]

Loading

செய்திகள்

ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சாரம்

ராணிப்பேட்டை, நவ. 22: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார சிறப்பு முகாம் 21–ந் தேதி முதல் 4.12.2025 வரை ஒருங்கிணைந்த வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.1100 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், நவ. 22: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி நேற்று வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் (ஓவல் ஆபீஸ்) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனையில் ‘பார்கின்சன்’ நோய் பாதிப்புக்கு பிரத்யேக சிகிச்சை மையம் திறப்பு

சென்னை, நவ. 22: நடுக்குவாதம் மற்றும் ஆழ்நிலை மூளை துாண்டல் சிகிச்சைக்காக, பிரத்யேக மருத்துவ மையத்தை, தமிழகத்திலேயே முதல் முறையாக அப்பல்லோ மருத்துவமனை துவக்கியுள்ளது. ‘பார்கின்சன்’ எனும் நடுக்குவாத பாதிப்புக்கு உள்ளானோருக்கு ஒருங்கிணைந்த மருத்துவக் கண்காணிப்புகள் அனைத்தும், ஒரே இடத்தில் வழங்கும் வகையில், பிரத்யேக மையத்தை, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று துவங்கியுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனை முதுநிலை நரம்பியல் நிபுணரும், உடல் இயக்க குறைபாடு வல்லுனருமான பி.விஜய்சங்கர் கூறியதாவது: மரபணு பாதிப்பு, புறச்சூழல் மற்றும் வயோதிகம் காரணமாக, […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சேலம், நவ. 22: சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. […]

Loading