செய்திகள் முழு தகவல்

‘‘ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் நிரந்தர வீடு; வீட்டிற்கு ஒரு பைக்’’: விஜய் வாக்குறுதி

சென்னை, நவ. 23: ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…’’ அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டிற்கு ஒரு பைக் வழங்கப்படும்’’ என்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் விஜய் வாக்குறுதி அளித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சிதம்பரம், நவ. 23: சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா […]

Loading

செய்திகள்

துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடல் கோவை வந்தது: கலெக்டர் தலைமையில் அஞ்சலி

கோவை, நவ. 23: துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடலுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் சக விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை கலெக்டர் அஞ்சலி செலுத்தினார். துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது. இந்தியா உட்பட முன்னணி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பில் விமான சாகச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு […]

Loading

செய்திகள்

போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி வங்கி கடன் மோசடி: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.23– பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம், பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று, ரூ.6 கோடியே 10 லட்சம் வரை மோசடி செய்ததாக, வங்கி நிர்வாகம், கடந்த 2024–-ம் ஆண்டு சிபிஐயிடம் புகார் அளித்தது. இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகார் மீது […]

Loading

செய்திகள்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு: 16 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை, நவ. 23: ‘தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில், 16 மாவட்டங்களில், இன்று மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ., மழை பெய்தது. […]

Loading

செய்திகள்

விஐடி பல்கலைகழகத்தில் போபால் மையம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல்

வேலூர்: நவ.23: விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வேந்தர் ஜி.விஸ்வநாதன் சான்றிதழ்கள் வழங்கி சிறபித்தார். விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் 3–-வது ஆண்டாக தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய மாணவர்கள் உணர்ந்து கல்வி பயின்று எதிர்காலத்தில் தமிழ்மொழியை சிறந்து விளங்கிட செய்ய இப் போட்டிகள் நடத்தபடுகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்த திட்டமிட்டு, […]

Loading

செய்திகள்

இத்தாலியின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்றார் அஜித் குமார்

சென்னை, நவ. 23: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் […]

Loading

செய்திகள்

சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா

புட்டபர்த்தி, நவ. 23: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று புட்டபர்த்தி பிரசாந்தி மந்திரில் பாபாவின் ஸ்வர்ண ரதோத்சவத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ சத்ய சாய் மாணவர்களின் வேதம் மந்திர பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் பஜனைகளும் மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. எஸ்எஸ்எஸ்சிடி நிர்வாக அறங்காவலர் ஆர்ஜெ ரத்னாகர், அனைத்து பிரமுகர்கள் மற்றும் பக்தர்களையும் அன்புடன் வரவேற்றார். விழாவில் தமிழக மற்றும் கர்நாடகாவின் பால் விகாஸ் மாணவர்களின் அழகான கலாசார விளக்கக்காட்சிகள் […]

Loading

செய்திகள் முழு தகவல்

பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும்: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, நவ.23: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று வரை புதிய ஆணையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைத்தல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காத்துக் கிடக்கும் நிலையில், அந்த ஆணையத்தை அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் (பாமக) தலைவர் அன்புமணி […]

Loading

செய்திகள்

28 புதிய மெட்ரோ ரெயில்கள் வாங்க சென்னை மெட்ரோ நிறுவனம் டெண்டர்

சென்னை, நவ. 23: 6 பெட்டிகளுடன் இயங்கும் வகையில், 28 புதிய மெட்ரோ ரெயில்கள் கொள்முதல் செய்ய, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தினமும் சராசரியாக 3.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து […]

Loading