செய்திகள்

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி டிசம்பர் 8–ந் தேதி சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி துவக்குகிறார்

சென்னை, நவ. 26– எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் டிசம்பர் 9-–ந் தேதி தொடங்குகிறது. இதில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சாா்பில் சென்னையில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 2023-இல் நடைபெற்ற போட்டியில். எகிப்து தங்கமும், மலேசியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றன. தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியா, ஈரான், ஜப்பான், […]

Loading

செய்திகள்

2030 காமன்வெல்த் விளையாட்டுகளை அகமதாபாத்தில் நடத்த அறிவிப்பு வெளியீடு

அமதாபாத், நவ. 26: அகமதாபாத்தில் 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுகள் நடத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீட்டுள்ளது.காமன்வெல்த் அமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 2030 நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தும் நகராக அகமதாபாத் நகரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2010-இல் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் இந்த உலகளாவிய பன்முக விளையாட்டு விழா நடைபெற இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பல தலைவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்று, இது […]

Loading

செய்திகள்

உரி நீர் மின் திட்டத்தை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் சதியை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது

ஸ்ரீநகர், நவ. 26: ஆபரேஷன் சிந்தூரின் போது உரி நீர்மின் திட்டத்தை தகர்க்க முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சி கேட்டுக் […]

Loading

செய்திகள்

தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்களுக்கு மானியம்: சென்னை ககெலக்டர் தகவல்

சென்னை, நவ. 26: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சென்னை மாவட்ட ககெலக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கும் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடனுதவியும், 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) மானியமும் வழங்குவதோடு, உரிய பயிற்சியும் […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26: உள்ளூர் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, நவ. 26: ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்த பணம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முதல்கட்ட தகவல் தெரிய வந்தது. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்: நாளை த.வெ.க.வில் இணைகிறார்

சென்னை, நவ. 26: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, […]

Loading

செய்திகள்

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு

சென்னை, நவ. 26: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பேரிடரை […]

Loading

செய்திகள்

வேப்பேரியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: 2 பேர் கைது

சென்னை, நவ. 26: வேப்பேரி பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வேப்பேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புரசைவாக்கம், தானா தெரு, ஆவின் பூத் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த சுதர்சன், […]

Loading

செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

கவுகாத்தி, நவ. 26– 2-வது டெஸ்டிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை ஒயிட்வாஸ் செய்து 25 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்தது. கவுகாத்தியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 […]

Loading