செய்திகள்

சிறுகதை …. டாக்டர் பெசன்ட் சாலை….! …. ராஜா செல்லமுத்து

‘டாக்டர் பெசன்ட் சாலை’ என்று எதற்குப் பெயர் வைத்தார்கள்? டாக்டர் பெசன்ட் என்பவர் யார்?’ என்ற குழப்பம் ஆரோக்கியசாமிக்கு வந்தது? தற்போது இருக்கும் Al ஐப் பயன்படுத்தியும், நூலகத்திற்குச் சென்றும் டாக்டர் பெசன்ட் சாலையைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தான். ‘ டாக்டர் பெசன்ட் சாலை, சென்னை எழும்பூர் – ராயப்பேட்டை பகுதிகளை இணைக்கும் ஒரு சாலையாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக ஆர்வலருமான அன்னிபெசன்ட் அம்மையாரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான […]

Loading

செய்திகள்

விருத்தாசலத்தில் ரூ.20 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு

கடலூர், ஜன.22– கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் ரூ.20.65 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி கடை, முத்துமாரியம்மன் கோயில் குளம் புனரமைப்பு, அறிவுசார் மையம், வணிக வளாக கடை, அரசு மருத்துவமனை கூடுதல் கட்டுமானம், மணிமுத்தாற்றில் படித்துறை பணி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது குறித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போதுகலெக்டர்சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியதாவது:– விருத்தாசலம் தினசரி காய்கறி கடை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் […]

Loading

செய்திகள்

பியூஸ் கோயலை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

சென்னை, ஜன.22- மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பாரிவேந்தருடன் சந்திப்பு பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பா.ஜ.க. தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். டி.டி.வி.தினகரனை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் […]

Loading

செய்திகள் விழாக்கள்

இந்தோ–ரஷ்ய பண்பாட்டு நட்பை கொண்டாடும் ரஷ்ய நடன விழா 2026

சென்னை, ஜன. 22: ரஷ்ய நடன விழா 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 9, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நடனத்தின் உலகளாவிய மொழி மூலம் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையிலான நீடித்த பண்பாட்டு நட்பை உற்சாகமாகக் கொண்டாடும் இந்த விழா, மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துவதிலும் கலைப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத்தின் பண்பாட்டு […]

Loading

Uncategorized செய்திகள்

இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு

நாசா, ஜன. 21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது. அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை படித்த […]

Loading

செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்: எடப்பாடி

சென்னை, ஜன. 21: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தீயசக்தி தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜன. 21: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார். மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்தை நடத்தவில்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஜன. 21: அ.தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. எங்களை யாரும் அணுகவோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்குள் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் […]

Loading

செய்திகள்

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கினர்

சென்னை, ஜன. 21: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘100 சதவீத உழைப்பைக் கொடுத்து தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 21: 100 சதவீத உழைப்பை கொடுத்து தேர்தல் களப்பணியாற்றுங்கள் என்று தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, […]

Loading