செய்திகள்

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

சென்னை, டிச. 2– முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோருடன் கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அண்ணா திமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு தமிழக காவல்துறை தரப்பில் […]

Loading

செய்திகள்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, டிச.2-– புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந்தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மறுநாளில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று […]

Loading

செய்திகள்

சென்னையில் விடாது கொட்டியது கனமழை

சென்னை: 2 சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 260 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று […]

Loading

செய்திகள்

டிட்வா சுற்றுச்சுழல் தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகரவில்லை

சென்னையில் மழை தொடரும் எச்சரிக்கை சென்னை, டிசம்பர் 2: டிட்வா புயல் பலவீனமடைந்திருந்தாலும், அதனுடன் தொடர்பான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த நள்ளிரவிலிருந்து சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நிலைவாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மண்டலத்தின் மந்தமான நகர்வு காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 24 மணி நேரமும் மழை தீவிரமாக தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மண்டலத்தின் நிலைமாற்றமின்றி […]

Loading

செய்திகள் முழு தகவல்

கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு

புதுடெல்லி, நவ. 29: வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள் ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷங்டன், நவ. 29: ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை ரத்து செய்வதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை பல ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். ஆட்டோபென் என்பது ஒரு இயந்திர சாதனம். இது ஒருவரின் கையெழுத்தை நகலெடுத்து பல ஆவணங்களில் விரைவாக கையெழுத்திட பயன்படுகிறது. இந்த முறையை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

சென்னை, நவ. 29: திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுவதாகவும், அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த 9 நாட்களில் மட்டும் தமிழர் உட்பட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘‘100 பிறவி எடுத்தாலும், நடிகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’: கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, நவ.29: “100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 56-வது […]

Loading

செய்திகள்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 8 பேருக்கு மறுவாழ்வு

சென்னை, நவ. 29: மூளைச் சாவு ஏற்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத்தினர் உறுப்புத் தானத்திற்கு முன்வந்ததின் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்று வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையின் துணைத்தலைவர் மற்றும் மூத்த மருத்துவரான டாக்டர் ராஜு சிவசாமி கூறினார். சென்னை வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில், மதுரவாயிலைச் சேர்ந்த 51 வயது பெண்ணை நவம்பர் மாதம் 25-ம் தேதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து துறைகளின் மூத்த மருத்துவ […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை, நவ. 29: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். வருகிற டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்தும் தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியில் எஸ்ஐஆர் மற்றும் இதர பணிகள் குறித்தும் […]

Loading