செய்திகள்

நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, டிச. 4: டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.1 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.6 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை, டிச. 4: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 90.15 வரை சரிந்தது. இந்நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது. வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 90.43 […]

Loading

செய்திகள் முழு தகவல்

ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச. 3: பா.ம.க. விவகாரத்தில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் […]

Loading

செய்திகள்

அன்புமணி பிரிவு பா.ம.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு

சென்னை, டிச.4: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை, பா.ம.க. நிர்வாகிகள் வக்கீல்கள் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஆகியோர் திடீரென சந்தித்தனர். இதுகுறித்து அண்ணா தி.மு.க. வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் […]

Loading

செய்திகள்

நாளைய புதுச்சேரி பயணத்தை ரத்து செய்தார் விஜய்

சென்னை, டிச. 4– தவெக தலைவர் விஜய்யின் ரோடுஷோவுக்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுக்காததால், பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்தார். தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் ரோடுஷோ நடத்துவதற்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே அனுமதி கோரினார். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், 2 முறை நேரில் சந்தித்து ரோடுஷோ […]

Loading

செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் வருகை: 15 லட்சத்தை கடந்தது

பத்தனம்திட்டா, டிச. 4– கேரளம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல–மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் […]

Loading

செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் பூட்டிய வீட்டில் ரூ.2.65 லட்சம் திருட்டு: சிறுவன் கைது

சென்னை, டிச. 4– எம்.ஜி.ஆர். நகர், ராமசாமி தெருவில் வசித்து வரும் சுந்தர்ராஜ் என்பவர் அன்னை சத்யா தெருவில் அவரது மாமனாரின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள, தனது வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வாசல் பகுதியில் மறைத்து வைத்துவிட்டு அவரது மனைவியுடன் சென்றுவிட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவில் பூட்டு இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.2.65 லட்சம் பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் […]

Loading

செய்திகள்

தன்னிறைவு, நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வரும் இந்திய கடற்படை

புதுடெல்லி, டிச. 4 இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– இந்திய கடற்படை வீரர்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் கடற்படை வீரர்கள் அசாதாரண தைரியம், உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர். நாட்டின் கடலோரங்களையும், கடல் வர்த்தக நலன்களையும் திறம்பட பாதுகாத்து வருகின்றனர். சமீப […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு: ரூ.96,160க்கு விற்பனை

சென்னை, டிச. 4– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 40-க்கும், ஒரு […]

Loading

செய்திகள்

‘‘தமிழ்த் திரை உலகின் முதுபெரும் ஆளுமை; ‘‘ஏவிஎம்.க்கு புகழ் சேர்த்தவர் சரவணன்’’

: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, டிச. 4– ‘‘ஏவிஎம்க்கு புகழ் சேர்த்தவர் சரவணன்’’. தமிழ்த் திரை உலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவர் என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியள்ளார். ஏவி.எம். சரவணனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு […]

Loading