செய்திகள்

மகாகவி பாரதியின் 143வது பிறந்தநாள்: தமிழில் பிரதமர் மோடி பதிவு

புதுடெல்லி, டிச. 11– மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க […]

Loading

செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி. செல்வகுமார்

சென்னை, டிச.11: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார், தி.மு.க.வில் இன்று இணைந்தார். சென்னையில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் நடத்தி வந்த கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்தார். அவருடன் அதன் நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க.வில் இணைந்தனர். விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய செல்வகுமார், பின்னர் விஜய்யின் மேலாளர் ஆனார். பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள செல்வகுமார், புலி, ஜெயில் […]

Loading

செய்திகள்

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது

சென்னை, டிச. 11: ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ (பூமியின் வெற்றியாளர்கள்) விருது தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுப்ரியா சாகு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது பணியாற்றி வருகிறார். ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தான்: ஐ.நா.சபையில் இந்தியா கண்டனம்

நியூயார்க், டிச. 11– ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானுக்கு, ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. ஆனால், அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

வாஷிங்​டன்அ டிச. 11: ‘‘ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள்’’ என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை ஏற்படுத்தியுள்ளது. பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ”சோமாலியாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவையில்​லை. அதற்குப் பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்களுக்கு அனுப்புங்கள்’’ என்றார். சோ​மாலியா […]

Loading

செய்திகள்

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி

விழுப்புரம், டிச. 11: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பொியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், க.பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலையில் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவ: முதலமைச்சர், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையினை வௌியிட்டதோடு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் : அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, டிச. 11: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு, சென்னை பெண்கள் (மாந்தோப்பு) மேல்நிலைபள்ளியில் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் வழகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட […]

Loading

செய்திகள்

தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

மதுரை, டிச. 11: அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 44 வார திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா தி.மு.க. அம்மா பேரவை போர்ப்படை வீரர்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட கடுமையாக உழைத்து வருகிறீர்கள். தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா […]

Loading

செய்திகள்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 11: இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் 19- வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த மூன்று நாள் மாநாட்டை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான துவக்கி வைத்து பி.சதாசிவம் பேசியதாவது: உற்பத்தித் துறை என்பது ஒரு தொழில்துறை மட்டுமல்ல. வலுவான பொருளாதாரத்திற்கு […]

Loading

செய்திகள்

அகில இந்திய புதுமை கண்டுபிடிப்புப் போட்டி-:

20 கல்லூரிகளின் 25 அணிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் பங்கேற்பு தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் பீடு நடை சென்னை, டிச. 11– தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் ‘‘அகில இந்திய புதுமை கண்டுப்பிடிப்பு போட்டி -2025’’ கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் […]

Loading