செய்திகள்

குடும்ப தகராறு: சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரம், டிச. 14– குடும்ப தகராறு காரணமாக சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சாமிசந்திரன் (வயது 38), சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்- – மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப […]

Loading

செய்திகள்

கம்போடியாவுடன் தொடரும் எல்லை மோதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

பாங்காக், டிச. 14– கம்போடியாவுடன் 5 நாட்களாக தொடரும் எல்லை மோதலில் தாய்லாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. […]

Loading

செய்திகள்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் பலி

டமாஸ்கஸ், டிச. 14– சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர், ஒரு மொழிப்பெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

வாஷிங்டன், டிச. 14– அமெரிக்காவில் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவின் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள். […]

Loading

செய்திகள்

தொழிலதிபரை ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி: அண்ணன்- – தம்பி உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 14– தொழிலதிபரை ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி செய்த அண்ணன் – -தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், தொழிலதிபர். இவர் தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 9-ந் தேதியன்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், தாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது தொழிலில் ரூ.40 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 5 மணி […]

Loading

செய்திகள்

234 தொகுதிகளுமே எங்கள் இலக்கு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, டிச. 13– கூட்டணி குறித்த அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. […]

Loading

செய்திகள்

2001 பார்லிமெண்ட் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் படத்திற்கு பிரதமர், துணை ஜனாதிபதி மலர் தூவி மரியாதை

புதுடெல்லி, டிச. 13– கடந்த 2001–ம் ஆண்டு பார்லிமெண்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு, இன்று பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13–ந்தேதி பார்லிமெண்ட் வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அந்த சதி திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 8 பேர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமான சேவை பாதிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

டெல்லி, டிச. 13– இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை. குறிப்பாக, குறைவான […]

Loading

செய்திகள்

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மெஸ்ஸி

கொல்கத்தா, டிச. 13– கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். உலகின் மிகசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறார், 15-ஆம் தேதி […]

Loading

செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அமெரிக்க செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, டிச.13- அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மறுநாள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்- 6′ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

Loading