செய்திகள்

ரூ.50 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டடப் பணி : சேகர்பாபு அடிக்கல்

சென்னை, டிச. 15: இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க. நகர் மண்டலத்தில் நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். 750 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் பல்நோக்கு மையக் கட்டடம் இது. இந்நிகழ்வின் போது, மேயர் ஆர்.பிரியா, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுமதி, புனிதவதி […]

Loading

செய்திகள்

ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள் : அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, டிச. 15: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 2021–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழ்நாட்டின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தேர்தல் […]

Loading

செய்திகள் முழு தகவல்

ரூ.120 கோடியில் சீரமைப்பு பணி: சோழவரம் ஏரி பாதுகாப்பாக உள்ளது

சென்னை, டிச. 15: ரூ.120 கோடியில் சோழவரம் ஏரியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை மண்டல நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று சோழவரம் ஏரியாகும். இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1891–ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 1970–ம் ஆண்டு காலத்திலிருந்து மூன்று முறை கரையின் […]

Loading

செய்திகள் முழு தகவல்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம்

சென்னை, டிச.15: மக்களின் நாடித் துடிப்பை அறியாமல், ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ள நிலையில், ‘மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லை’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவமனைகள் உட்பட பல அலுவலகங்களில் காலிப் […]

Loading

செய்திகள்

நாளை முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 `ஏர்பஸ்’ விமானம் இயக்கம்

திருச்சி, டிச. 15: நாளை முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 முறை `ஏர்பஸ்’ விமானம் இயக்கப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம், ஏ.டி.ஆர். ரக விமானங்களை கொண்டு இயக்கி வருகிறது. இதில் குறிப்பாக சென்னைக்கு தினமும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 7.35, 10.35, மதியம் […]

Loading

செய்திகள்

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை, டிச. 15: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புழல் அறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி, டிச. 15: இந்திய சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இதனிடையே, குஜராத்தின் நடியாட் பகுதியில் 1875ம் ஆண்டு பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1950ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

திருவண்ணாமலை, டிச. 15: ‘அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்துக்கு அடிபணியமாட்டோம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சியில் இது வரை 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை, டிச. 15: சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 1,05,556 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 2,930 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிப்பொழிவு: விமான சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி, டிச. 15: டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்களின் நிலை அறிந்து விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading