செய்திகள்

மணலி ஏரியில் ரூ.6.70 கோடியில் செய்த புனரமைப்புப் பணிகள்:

ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சி சென்னை, டிச.17– சென்னை மணலி ஏரியில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளின் காரணமாக தற்போது பெய்த மழையினால் ஏரியில் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மணலி மண்டலம், வார்டு -20க்கு உட்பட்ட மணலி ஏரியில் 29 ஏக்கர் பரப்பளவில் (1,17,160 சதுர மீட்டர்) 1.20 மீ. ஆழத்துடன் 4 லட்சம் கனஅடி நீர்த்தேக்கம் உடையதாக இருந்தது. இதில் தற்போது அம்ரூத் மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.6.70 […]

Loading

செய்திகள்

நீதி கிடைக்க பா.ம.க. போராட்டம் நடத்தும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தர்மபுரி, டிச.16: தர்மபுரியில் பள்ளி மாணவி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மூடி மறைக்க ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் திமுகவின் நீதியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரின் தவறை மூடி மறைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள் […]

Loading

செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 16: தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16–ந்தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒருசில […]

Loading

செய்திகள்

திமுக அரசு மாநகராட்சியை கண்டித்து கும்பகோணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை, டிச.16: கும்பகோணம் மாநகராட்சியில் தற்போதைய பேருந்து நிலையத்திலேயே போதுமான இட வசதி உள்ள நிலையில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளின் உறவினர்களுக்குச் சொந்தமான நிலங்களின் மதிப்பு உயர வேண்டும் என்ற சுயநலத்துடன், அவர்களது நிலங்களுக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கத் துடிக்கும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட […]

Loading

செய்திகள்

பாடியில் பிரமாண்ட போத்தீஸ் ஜவுளி, நகை மாளிகை துவக்க விழாவையொட்டி தள்ளுபடி, விலை குறைப்பு சலுகைகள்

சென்னை, டிச.16: சென்னை பாடியில் போத்தீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜவுளி, நகைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடியில் பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மகால் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போத்தீஸ் நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமான இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த புதிய கிளையை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பாராவ், அவருடைய மனைவியும், ஐ.சி.எப். பெண்கள் அமைப்பின் தலைவியுமான […]

Loading

செய்திகள்

16 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியை மடக்கிப் பிடித்த நபருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் நேரில் பாராட்டு

சிட்னி, டிச. 16: 16 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிப் பிடித்த நபரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார் ‘ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என்று அவரைப் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பின்னால் இருந்து ஒருவர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். […]

Loading

செய்திகள் முழு தகவல்

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 16: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை, திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலக் குழுத்தலைவர்களிடம் தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற […]

Loading

செய்திகள்

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி இருமுடி விழா லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கினார்

மேல்மருவத்தூர், டிச. 16: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவையொட்டி சக்தி மாலை இருமுடி விழாவை நேற்று காலை கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உருவ சிலைக்கும், […]

Loading

செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், டிச.16: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களின் […]

Loading

செய்திகள்

ரெயில் பெட்டிகள் மீது கல் வீசுபவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சென்னை, டிச. 16: ரெயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரெயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ‘வந்தேபாரத்’ ரயில் மீது விருத்தாசலம், தாழநல்லூர் இடையே மணலூர் கிராமத்தில் சிலர் கற்களை வீசினர். இதில் ரயில் பெட்டிககளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. […]

Loading