செய்திகள்

அமெரிக்காவுக்குள் 7 நாடுகள் நுழையத் தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன், டிச. 17– சிரியா, மாலி உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா அதிபர் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் […]

Loading

செய்திகள்

நானோ தொழில்நுட்பம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது:

வி.ஐ.டி. சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு காட்பாடி, டிச.17-– நானோ தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் கூறினார். காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா நேற்று நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 […]

Loading

செய்திகள்

காந்தி பெயர் மாற்றம்: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெங்களூர், டிச. 17– மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

வேலூர், டிச. 17– வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். நேற்று முதல் 22–ந்தேதி வரை தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரத்துக்கு ஜனாதிபதி இன்று காலை 11.20 மணிக்கு வருகை தந்தார். தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கிய ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.11,000 உயர்ந்த வெள்ளி

சென்னை, டிச. 17– வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதே நேரத்தின் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 99,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 222 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்

140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என பெருமிதம் அடிஸ் அபாபா, டிச. 17– எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு அடிஸ் அபாபா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை […]

Loading

செய்திகள்

எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும்; வெனிசுலாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், டிச.17– வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதையடுத்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், இருநாடுகளிடையே பதற்றத்தை […]

Loading

செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மோடி, அமித்ஷா பதவி விலக கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 17– நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு பிறகு மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்த வழக்கின் நோக்கம், காந்தி குடும்பத்தை துன்புறுத்தவும், எதிர்க்கட்சிகளை குறிவைப்பதும்தான் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை […]

Loading

செய்திகள்

சென்னையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா

பூந்தமல்லி, டிச.17– அண்ணா தி.மு.க. சார்பில் 18–ந் தேதி (நாளை) நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்துள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முகப்பேர் மேற்கு பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தி.ப.கண்ணன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ராயபுரம் ஆர்.மனோ, முன்னாள் எம்.பி. ஜெகந்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், […]

Loading

செய்திகள்

பயிர் விளைச்சலில் சாதனை: 34 விவசாயிகளுக்கு விருது

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார் சென்னை, டிச.17– மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 31 விவசாயிகள் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது போட்டிகளில் வெற்றி பெற்ற 3 விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விருதுகள் வழங்கினார் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் மற்றும் சீரிய முயற்சிகளின் காரணமாக இருபோக சாகுபடி பரப்பு மற்றும் பாசன வசதி பெறும் பரப்பானது கணிசமாக உயர்ந்து வருவதுடன் […]

Loading