செய்திகள்

உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண நிதி, பணி நியமன ஆணை: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர், டிச. 18: திருத்தணி அருகே சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் பணி நியமன ஆணையினையும் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொண்டாபுரம் ஊராட்சி;யில் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹித் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது […]

Loading

செய்திகள்

நாளை தமிழகத்தை ஆள போவது விஜய் தான்: செங்கோட்டையன் உறுதி

ஈரோடு, டிச. 18: புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதியை காண்கிறேன். 234 தொகுதிகளிலும் விஜய் யாரை காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் என்று செங்கோட்டையன் உறுதிபட கூறினார். கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 81 நாட்கள் கழித்து, தமிழ்நாட்டில் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தவெக தலைவர் விஜய். அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது. பெருந்துறை – […]

Loading

செய்திகள்

வடபழனி – காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரைப்பை, கல்லீரல் நோய் , சிகிச்சை பிரிவு துவக்கம்

சென்னை, டிச.18: பல்துறை சிகிச்சையில் சென்னையின் முன்னணி மருத்துவமனையான வடபழனி காவேரி மருத்துவமனை, ‘காவேரி செரிமான மண்டல அறிவியல் மையம் என்றசிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சையை வழங்குவதோடு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும். மக்கள் தொகையில் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர், ஆனால் குறைவான […]

Loading

செய்திகள்

ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்

சென்னை, டிச. 18: பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. அன்புமணி தலைமையில் செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது- பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

விழுப்புரம், டிச. 18: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 17.12.2025 முதல் 27.12.2025 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார […]

Loading

செய்திகள்

புத்தாண்டுக்கு சொந்த ஊர் பயணம் சென்னை–நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை: டிச. 18– கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதற்காக வரும் டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 அன்று நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். மறுமார்க்கமாக டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது இந்த ரயில்கள் […]

Loading

செய்திகள்

ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; அண்ணாமலை

சென்னை: டிச. 18– ஜால்ரா அடித்துதான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டி அவரது […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்: தவெக தொண்டர்கள் திரண்டதால் பரபர

ஈரோடு: டிசம்பர் 18 கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக நடைபெறும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இன்று (டிசம்பர் 18) நடைபெறும் இந்தப் பிரசார கூட்டம் தவெக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு விஜய் கோவைக்கு வருகிறார். சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர் அங்கு சுமார் அரை மணி […]

Loading

செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை முறிந்தால் கடும் விளைவுகள்: அதிபர் புடின் எச்சரிக்

மாஸ்கோ:  டிச. 18– உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்புகளை ரஷ்யா கைப்பற்றும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இந்தக் கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிர ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் […]

Loading

செய்திகள்

சுங்கச்சாவடிகளில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கட்டண வசூல்; 

புதுடில்லி: டிச. 18– நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை முற்றிலுமாக நீக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான புதிய டிஜிட்டல் கட்டண வசூல் தொழில்நுட்பத்தை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு (Multi-Lane Free Flow – MLFF) மற்றும் முழுமையான ஏஐ தொழில்நுட்பம் இணைந்த […]

Loading