செய்திகள்

63 பேருக்கு ரூ.2.53 கோடி வங்கி கடன் கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், டிச. 24– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தொழில் மையம், கடலூர், முன்னோடி வங்கி மற்றும் இதர வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் தொழிற் கடன் வழங்கும் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 63 நபர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் மாவட்டத் தொழில் மையம் மற்றும் […]

Loading

செய்திகள்

வங்கதேச வன்முறையில் இந்துக்கள் மீது தாக்குதல்: ஐநா கவலை

நியூயார்க், டிச. 23– வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் […]

Loading

செய்திகள்

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு

பெர்லின், டிச. 23– அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் குற்றம்சாட்டி பேசியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை பா.ஜ.க.வினர் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி பெர்லின் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சந்தித்து […]

Loading

செய்திகள்

சென்னை பெரியார் நகரில் ஜனவரி 13-ந்தேதி புதிய பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு

சென்னை, டிச.23-– ‘சென்னை பெரியார் நகரில் புதிதாக ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் வருகிற ஜனவரி 13-ந்தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் கூறினார். மொபைல் பாஸ்போர்ட் சேவை வாகனம் மற்றும் மின்னணு பாஸ்போர்ட் போன்ற திட்டங்களை முன்னெடுத்து சென்ற, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-– ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் இருக்க வேண்டும் என்பது […]

Loading

செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

சென்னை, டிச. 23– சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் மற்றும் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.சமீபத்தில் மகாத்மா காந்தி […]

Loading

செய்திகள்

6வது நாளாக தொடர் போராட்டம்: செவிலியர்கள் கைது

சென்னை, டிச. 23– 6 வது நாளாக கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தங்களது துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 18 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது. அதைத் […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், டிச. 23– இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து இதுவரை 1 கோடி பேர் உயிரை காப்பாற்றி உள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா–உக்ரைன் போர் மட்டும் தான் என்றும் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெரும் பகை உள்ளது. […]

Loading

செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் கவுன்டவுன் துவங்கியது

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 23– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை ‘புளூபேர்ட்’ என்னும் அமெரிக்க செயற்கைக்கோள் எல்.வி.எம்.3–எம்.6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் […]

Loading

செய்திகள்

பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை அருள் எம்.எல்.ஏ. பேட்டி

திண்டிவனம், டிச. 23– பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

Loading

செய்திகள்

நிதி மேலாண்மை, தரவு சார்ந்த முடிவெடுப்பதில் கணிதத்தின் பயன்பாடு தேசிய பங்குச்சந்தை தலைமை நிபுணர் தீர்த்தங்கர் பட்நாயக் விளக்கம்

சென்னை, டிச. 23– ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகழ்பெற்ற கணிதவியலாளர் ராமானுஜனின் 138வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் – 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதுநிலை கணிதத் துறையின் “Math π Rates” கிளப், உள் தர உறுதி குழு (IQAC) இணைந்த நடத்தி இந்த நிகழ்ச்சி கல்வியிலும் அன்றாட வாழ்விலும் கணிதத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் முதன்மை நோக்கமாக இருந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா […]

Loading