செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்

சென்னை, டிச.29- தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் படிவங்களை வழங்கினர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் கள்ளக்குறிச்சியில் விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி டிச.29– தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த இந்திய காவல்பணி இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில், விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் கா.தென்னரசு தலைமையில், விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் இருசம்மாள், நாகை மாவட்ட அலுவலர் முகுந்தன், மற்றும் விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த உதவி மாவட்ட […]

Loading

செய்திகள்

கடலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்

கடலூர், டிச.29– கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை இன்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பசுந்தீவனம் தாதுஉப்புக் கலவையை வழங்கினார். பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:– கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு […]

Loading

செய்திகள்

2025ல் இந்தியாவின் மகத்தான சாதனை: மோடி பெருமிதம்

* கிரிக்கெட் வெற்றி * அறிவியல் கண்டுபிடிப்பு * ‘ஆபரேஷன் சிந்தூர்’ புதுடெல்லி, டிச.28– ‘நடப்பு ஆண்டில் (2025) கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் என இந்தியா மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது’ என பிரதமர் மோடி பெருமிதத்தோடு கூறினார். அறிவியல், விண்வெளித் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது; சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார் என்றும் மகிழ்ச்சி பெருமிதத்தோடு கூறினார். பிரதமர் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருச்சி வருகை: விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி, டிச. 28– துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை திருச்சி வருவதையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் […]

Loading

செய்திகள்

‘நான் கட்ட நினைத்த சிறிய மணல்வீட்டை பெரிய கோட்டையாக மாற்றிக் காட்டிய ரசிகர்கள்’:

விஜய் உணர்ச்சிகரமான பேச்சு ‘அடுத்த 30 வருடங்களுக்கு உங்களோடு நிற்க விரும்புகிறேன். மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீடு கோலாலம்பூர், டிச.28- ‘என் ரசிகர்கள் கடந்த 30 வருடங்களாக என்னுடன் நின்றனர். இப்போது, அடுத்த 30 வருடங்களுக்கு அவர்களுடன் நான் நிற்க விரும்புகிறேன் என்று விஜய் நம்பிக்கையோடு பேசினார். ‘ஒரு பெரிய கடலில் ஒரு சிறிய மணல் வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசையில் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால் என் ரசிகர்கள் அதை ஒரு பெரிய […]

Loading

செய்திகள்

பல்பாக்கி சி. கிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.28– பல்பாக்கி சி. கிருஷ்ணன் அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க.வின் கொள்கை -குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் […]

Loading

செய்திகள்

2 -ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

சென்னை: , டிச. 28– தமிழக அரசியலும் திரைத்துறையும் ஒரேவேளை சோகத்தில் மூழ்கியவர், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று, 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். […]

Loading

செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் பெண் தவறவிட்ட 5½ பவுன் தாலிச் செயினை மீட்ட போலீசார்

சென்னை, டிச. 28– வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண் தவறவிட்ட 5½ சவரன் தாலிச்செயினை விரைந்து கண்டுப்பிடித்து மீட்ட போலீசார் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர், மேற்கு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வரும் நஸ்ரின் (28) தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். நஸ்ரின் அவரது உறவினர்களுடன் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள வீராஸ் துணிக்கடையில் துணிகள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி பழைய வண்ணாரப்பேட்டை, […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்;

தேமுதிக-திமுக கூட்டணி குறித்து புதிய ஊடக விவாதம் சென்னை: டிச. 28 – திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான முக்கிய முன்னோட்டமாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இது, தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்கான தொடக்க நிகழ்வாகும். இந்த நிகழ்வில் துணை முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எவ்.வேலு உட்பட பலர் நேரில் கலந்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் தமிழக அரசியல் வட்டங்களில் புதிய ஆர்வம் […]

Loading