செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் : எடப்பாடி குற்றச்சாட்டு

திருத்தணி, டிச. 30: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினார். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் […]

Loading

செய்திகள்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீரும்: திருப்பூர் தி.மு.க. மகளிரணி மாநாட்டில் ஸ்டாலின் உறுதி

திருப்பூர், டிச. 30: வரும் தேர்தலில் வெற்றி பெற்று பெண்களுக்கான திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள், சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி சமீபத்தில் இளைஞரணி மண்டல கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மேற்கு மண்டல […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்தது: வெள்ளி விலையும் சரிந்தது

சென்னை, டிச. 30: தொடர்ந்து ஏற்றம் கண்டு அதிர்ச்சி அளித்து வந்த தங்கம் விலை இன்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. சர்​வ​தேச பொருளா​தார சூழல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் தங்​கம் விலை […]

Loading

செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் கோவிலில் அலை மோதியது பக்தர்கள் கூட்டம்

இன்று வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் அதிகாலை சொக்கவாசல் திறப்பு கோவிந்தா–கோவிந்தா’ என பக்தி கோஷம் சென்னை, டிச. 30– இன்று (30ந் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. ‘ரங்கா, கோவிந்தா–கோவிந்தா’ என பக்தி கோஷத்துடன் பரமபதவாசல் வழியாக பக்தர்கள் கடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி […]

Loading

செய்திகள்

டெல்லியில் அடர் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து

புதுடெல்லி, டிச. 30: டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இன்று பிற்பகல் வரை அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக, டெல்லி சர்வதேச […]

Loading

செய்திகள்

உலக ‘ரேபிட்’ செஸ் தொடரில் வெண்கலம்: அர்ஜுன், ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, டிச. 30: உலக ‘ரேபிட்’ செஸ் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அர்ஜுன், ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) சார்பில் உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதலில் ‘ரேபிட்’ பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி (வயது 38), ஓபன் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வயது 22), வெண்கலம் கைப்பற்றினர். உலக ‘ரேபிட்’ பிரிவில் 5 […]

Loading

செய்திகள்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா திருப்பி அனுப்பிய ஜனாதிபதி

சென்னை, டிச. 30: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான சட்டசபை சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி 3 ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பினார். தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை, வேந்தரான கவர்னரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு […]

Loading

செய்திகள்

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு நிறைவு விழா

சென்னை, டிச. 30: சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், வேல்ஸ் கல்வி குழும தலைவர் ஐசரி கே கணேஷ் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27-ந் தேதி இந்திய பொருளாதார சங்கத்தின் 108-வது ஆண்டு மாநாடு தொடங்கியது. மாநாட்டை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் எஸ்.மகேந்திர தேவ் தொடங்கி வைத்தார். […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை சியாம்பாடியில் புதிய ரேஷன் கடை: அமைச்சர் காந்தி திறந்தார்

ராணிப்பேட்டை, டிச. 30: கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திமிரி ஊராட்சி ஒன்றியம், ஆயிரமங்கலம் ஊராட்சி சியாம்பாடி கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.19.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ராணிப்பேட்டை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு

சென்னை, டிச. 29: கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அய்யாக்கண்ணு என்பவரின் மகன் ராஜகோபால் (வயது 57) என்பவர் நேற்று (28–ந் தேதி) காலை தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் […]

Loading