செய்திகள்

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரம் ராமேஸ்வரம், டிச.31- ”காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய தேசம் குறித்து மகாகவி பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடியின் காசி, தமிழ் சங்கமம் மூலம் நிறைவேறியுள்ளது” என ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த 2-ந்தேதி வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி […]

Loading

செய்திகள்

மீஞ்சூர் ஒன்றியத்தில் 75 பழங்குடி குடும்பத்தினருக்கு தலா 4 வெள்ளை ஆடுகள்

பொன்னேரி டிச-30 சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகம் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கால்நடை வளர்ப்பு மூலம் மேம்படுத்தும் திட்டம் நடைபெற்றது. இதில் தத்தைமஞ்சி லட்சுமி அம்மன் நகர், மெதூர் முல்லை நகர், பழவேற்காடு- குளத்துமேடு, ஆரணி-பாலவாக்கம் ஜெ.ஜெ.நகர், தோணிரேவு உள்ளிட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் 75 பழங்குடியின குடும்பங்களைச் […]

Loading

செய்திகள்

20 விவசாயிகளுக்கு ரூ. 29 லட்சம் நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வழங்கினார்

திருவள்ளூர், டிச. 31– திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 விவசாயிகளுக்கு ரூ.28,81,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் 2025-–26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் […]

Loading

செய்திகள்

41 தங்க பதக்கங்களுடன் குழு கோப்பையை வென்ற செங்கை மாவட்ட வீரர்கள்

ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி திருப்போரூர், டிச. 31– ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கை மாவட்ட வீரர்கள் 41 தங்க பதக்கம், 8 வெள்ளி பதக்கங்களுடன் குழுகோப்பையை வென்று அசத்தினர். புதுச்சேரியில், மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் இந்தியா சார்பில், ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் –2025 போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகளில் நாடு முழுதும் இருந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நடந்த சிலம்பம் […]

Loading

செய்திகள்

திராவிட மாடல் ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, டிச. 31– திராவிட மாடல் ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் கலைஞர் விளையாட்டு […]

Loading

செய்திகள்

4–ந்தேதி வீரபாண்டி, 5–ந்தேதி கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டம்: எடப்பாடி பேசுகிறார்

சென்னை, டிச. 31– அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 4–ந்தேதி அன்று சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியிலும், 5–ந்தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட மகளிர் அணி எழுச்சிப் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி […]

Loading

செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

425 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிப்பு சென்னை, டிச.31- வரும் புத்தாண்டு விழாவையொட்டி, சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆர்வமாக உ்ளளனர். தலைநகர் சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் […]

Loading

செய்திகள்

ஆட்டம், பாட்டம், புத்தாண்டு கொண்டாட்டம்.. இதை செய்தால் கடும் நடவடிக்கை..!

சென்னை, டிச. 31:2026 புத்தாண்டை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடும் நோக்கில், சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு முன்னிட்டு சென்னை முழுவதும் 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு துணையாக 1,500 ஊர்காவல் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் பாதுகாப்பு பணிகள் தொடங்கும். மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், […]

Loading

செய்திகள்

அறிவாலயம், அண்ணா சாலை முற்றுகை: துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

1,100க்கும் மேற்பட்டோர் கைது சென்னை, டிச. 31:சென்னை மாநகராட்சியில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தப்பட்டது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் […]

Loading

செய்திகள்

வேலூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சுப்புலெட்சுமி திறந்தார்

வேலூர், டிச. 30: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியை வேலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், லட்சுமணசாமி டவுன் ஹால், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் என்ற இடத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் “கைவினை கண்காட்சி” என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி […]

Loading