செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வேளாண்மை மண்டல மாநாடு

சிதம்பரம், ஜன. 10: அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தின் இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண் மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள மண்டல அங்கக மற்றும் இயற்கை வேளாண் மையம் ஆகியவை இணைந்து, “இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை” குறித்த மண்டல மாநாடு நடைபெற்றது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். விழாவின் தொடக்கத்தில், இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண் மையத்தின் இயக்குனர் ஆர். ராமன் […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி ஆரம்பம்

புதுடெல்லி, ஜன. 10: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான கால அட்டவணையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இறுதி செய்துள்ளது. அதன்படி வருகிற 28-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய நாளில் […]

Loading

செய்திகள்

“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைபேசி இணைப்பு: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 10: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் […]

Loading

சினிமா செய்திகள்

ஈழத்து வலியில் கிட்டுவின் ‘சல்லியர்கள்’ சினிமா: உயிரோட்ட நடிப்பில் காமெடி கருணாஸ், ‘ரீல்ஸ்’ சத்யாதேவி!

‘இன்ஸ்டாகிராமில்’ ரீல்ஸ் போட்ட சத்யா தேவி, சமூக ஊடகத்திலிருந்து வெள்ளித்திரைக்குள் ஊடுருவி இருக்கிறார். படம்:“சல்லியர்கள்”. அறிமுகம். புது முகமா… சத்தியம் பண்ணினாலும் நம்பவே மறுப்பார்கள். நின்றால்… நடந்தால்… ஆண் டாக்டரின் கேள்விக்கு பதில் தந்தால் … சட்டென்று திரும்பிப் பார்க்கும் அந்தப் பார்வையில்- புகுந்து நம் இதயத்தில் உறைகிறார். (இதயத்தை கனமாக்கும் கதையில், உறக்கத்தை கெடுக்கிறார் என்னமாய் நடிப்பு…?!) சல்லியர்கள்: ஈழ வரலாற்றில் தைரியம் இரக்கம், நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த போராளி மருத்துவர்கள். அவர்களுக்கு வீர வணக்கத்துடன் நடிகர் […]

Loading

செய்திகள்

சென்சார் போர்டு – ‘மத்திய அரசின் புதிய ஆயுதம்’: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 10: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் முதலில் அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்தை வரவேற்க அவரது ரசிகர்களும், த.வெ.க.வினரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) இந்த படத்துக்கு சான்றிதழை வழங்காததால் […]

Loading

செய்திகள்

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளிவருதில் மீண்டும் சிக்கல்?

* தணிக்கைச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு * தீர்பை எதிர்த்து சென்சார் போர்ட் மேல்முறையீடு சென்னை, ஜன. 9– விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த படம் ‘பொங்கலுக்கு’ வெளிவருதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் […]

Loading

செய்திகள்

டிஜிட்டல் கைது என்று கூறி சென்னை பெண்ணிடம் மோசடி: ரூ. 20 லட்சத்தை மீட்ட போலீசார்

சென்னை, ஜன. 9– சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸ் என கூறி மிரட்டி டிஜிட்டல் கைது செய்து, ரூ.20 லட்சம் அபகரித்த வழக்கில் 14 நாட்களுக்குள் ரூ.20 லட்சம் பணத்தை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டனர். சென்னை நானக்யன் மெயின் ரோடு, அண்ணாமலை அவென்யு பகுதியைச் சேர்ந்த எஸ். லதா என்பவர் கடந்த 23.12.2025 அன்று மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையம் ஆஜராகி, கடந்த 20.12.2025ம் தேதி தன்னை 7999822036 […]

Loading

செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று இரவு திரிகோணமலை அருகே கரையை கடக்கும்

சென்னை, ஜன. 9– தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு திரிகோணமலை இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் – […]

Loading

செய்திகள்

பராசக்தி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்: திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது

இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை சென்னை, ஜன. 9– பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பராசக்தி’ படம். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை 10–ந் தேதி வெளியாகும் என படக்குழு […]

Loading

செய்திகள்

மேடவாக்கம் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா புதிய கிளை துவக்கம்

சென்னை, ஜன. 9– பேங்க் ஆப் இந்தியா தனது புதிய கிளையை சென்னை, மேடவாக்கத்தில் திறந்துள்ளது. இது சென்னை மண்டலத்தில் வங்கியின் 85வது கிளையாகும். வங்கியின் 120வது நிறுவன தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து நடைபெற்றது. மேடவாக்கம் பிரதான சாலை, கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ப்ரீத்தா தலைமையகத்தில் இக்கிளை, வேகமாக வளர்ந்து வரும் மேடவாக்கத்தின் வணிக, தகவல் தொழில்நுட்ப மற்றும் குடியிருப்பு மையத்திற்கு சேவை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு […]

Loading