செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடக்கும்

டெல்லி, ஜூலை 3– நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ந்தேதி முதல் ஆகஸ்ட் 21 ந்தேதி வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். பொதுவாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களையும் முன்னிலைப்படுத்தும். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ந் தேதிகளில் கூட்டத்தொடர் […]

Loading

செய்திகள்

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது

திண்டுக்கல், ஜூலை 3– அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56). இவர், பழனியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியை சேர்ந்த வடிவேல் மனைவி ரீத்தா (46). இவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ளார்.முருகானந்தத்துக்கும், ரீத்தாவுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் முருகானந்தத்தை […]

Loading

செய்திகள்

அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்

தைலாபுரம், ஜூலை 3– அருள் எம்.எல்.ஏ.வை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, ராமதாசுக்கு ஆதரவாக பேசிய அருள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., நிர்வாகிகளை […]

Loading

செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

மதுரை, ஜூலை 3– திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக 2வது நாளாக நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு, […]

Loading

செய்திகள்

1 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை அபாயத்தில் தள்ளும் டிரம்ப்: ஒபாமா எதிர்ப்பு

வாஷிங்டன், ஜூலை 3– மெடிக்எய்டு திட்டத்திற்கான நிதியை, குறைக்கும் வகையிலான மசோதாவை டிரம்ப் நிர்வாகம் நிறைவேறினால், 1 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள் அபாயத்தில் தள்ளப்படுவார்கள் என்று முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, மெடிக்எய்டு (Medicaid) எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, முந்தைய ஒபாமா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது. எனவே, […]

Loading

செய்திகள்

தேனி காவல் நிலையத்தில் விசாரணை கைதியை தாக்கும் போலீசார்:

தேனி, ஜூலை 2– தேனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் இறந்தார். அதுமட்டுமின்றி அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது. இந்த […]

Loading

செய்திகள்

காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை: ஆவணங்கள் ஒப்படைப்பு

சிவகங்கை, ஜூலை 2– இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.இந்த மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த வழக்கை மதுரை 4-வது […]

Loading

செய்திகள்

மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவில்லை :

சென்னை, ஜூலை 2– மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காத தி.மு.க. அரசிற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு திட்டம் தீட்டப்பட்டு அந்தத் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடைந்தால் தான் அது திட்டம் என்று கருதப்படும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது. 2021–ம் ஆண்டு முதல் 2025–ம் ஆண்டு வரை ஐந்து […]

Loading

செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை, ஜூலை 2– கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்தில், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் என்று 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டிடத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அதிகாரி அறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.அதுபோன்று பழைய கட்டிடத்தில் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, சமூக நலத்துறை, நிலவரித்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, உள்பட பல்வேறு துறைகளும் […]

Loading

செய்திகள்

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா

சென்னை, ஜூலை 2– திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் சகோதரருக்கு பணி நியமன ஆணையினையும் அக்குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் நேரில் சென்று வழங்கினார். முதலமைச்சர் […]

Loading