செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 4– கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சம்பளம் தாமதப்படுத்துவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. விதைச் சான்றளிப்புத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு 2022–ம் ஆண்டு நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்தது, ஒருங்கிணைந்த […]

Loading

செய்திகள்

பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம்: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

சென்னை, ஜூலை 4–- சென்னையில் பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் விரைவான சேவைக்காகவும், போலி பாஸ்போர்ட்டுகளை குறைப்பதற்காகவும், பொதுமக்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக ‘சிப்’ பொருத்திய மின்னணி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தவகை […]

Loading

செய்திகள்

சென்னை நகரில் வீடுவீடாக நேரில் போய் மக்களிடம் ஸ்டாலின் உரையாடினார்

சென்னை, ஜூலை 3– தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் மக்களைச் சேர்க்க நேரடியாக சந்தித்தார். இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முதலமைச்சரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற பொதுமக்கள் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை; இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம்” என்றனர். இதைக் கேட்டு முதல்வர் பெருமகிழ்ச்சியடைந்தார். “உங்களால் தான் தமிழ்நாடு கல்வி, தொழில் […]

Loading

செய்திகள்

மோடிக்கு கானா நாட்டின் தேசிய விருது வழங்கி கவுரவிப்பு

அக்காரா, ஜூலை 3– கானாவின் வளர்ச்சி பயணத்தில் இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 5 நாடுகள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு முதலில், கானா நாட்டுக்கு சென்றார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும். கானா சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜான் டிரமனி மஹாமா வரவேற்றார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே நடந்த துணிகரம் வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைக் கொள்ளை

கள்ளக்குறிச்சி, ஜூலை 3– கள்ளக்குறிச்சி அருகே வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கடுவனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தமது 2வது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வங்கி லாக்கரில் இருந்து 200 சவரன் நகைகளை எடுத்து வைத்திருந்த கேசரி வர்மன் அவசர வேலையாக […]

Loading

செய்திகள்

உயிருக்கு அச்சுருத்தல்: வீடியோ எடுத்தவர் பேட்டி

சிவகங்கை, ஜூலை 3– இளைஞர் அஜித்குமார் மரணத்தில் ‘சாட்சிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). காரில் இருந்த நகைகள் மாயமான புகார் தொடர்பாக அவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திருப்புவனம் இளைஞர் மரணம் வழக்கில் […]

Loading

செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை, ஜூலை 3– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சவரனுக்கு ரூ.320 உயர்வு அந்த வகையில், […]

Loading

செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 2,620 கோடி அபராதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றம் தீர்ப்பு நியூயார்க், ஜூலை 3– ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர் (சுமார் 2,620 கோடி ரூபாய்) அபராதம் விதித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்களின் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை கூகுள் சேகரித்து, […]

Loading

செய்திகள்

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளியின் தாயாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

மதுரை, ஜூலை 3–- போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். நீதி கிடைக்க துணை நிற்போம் எனவும் உறுதி அளித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்ற கோவில் காவலாளி, காரில் இருந்த நகைகள் மாயம் குறித்த புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் அடித்துக்கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணா தி.மு.க. […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது: அதிபர் ஜான் டிராமணி வழங்கினார்

அக்ரா, ஜூலை 3– கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நிலையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. 5 நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, முதலாவதாக கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமா மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் […]

Loading