செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி

சென்னை, ஜூலை 5– சென்னையில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை

கன்னியாகுமரி, ஜூலை 5– காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். நிதின்ராஜ் பி.இ. படித்துள்ளார்.இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் […]

Loading

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சாத்தூர், ஜூலை 5– விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, ‘கோகுலேஷ்’ பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 1–ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.72,480க்கு விற்பனை

சென்னை, ஜூலை 5– தங்கம் விலை இன்று உயர்ந்து, சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் […]

Loading

செய்திகள்

7வது முறையாக ‘தி.மு.க. ஆட்சி அமைய உறுதி ஏற்போம்’: நிர்வாகிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

இளைஞரணி செயலாளராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு சென்னை, ஜூலை.5- தி.மு.க. இளைஞரணி செயலாளராக பதவியேற்று உதயநிதி ஸ்டாலின் 7ம் ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதையொட்டி அவர் தி.மு.க. ஆட்சி 7வது முறை அமைவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி செயலாளராக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவியை ஏற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்து […]

Loading

செய்திகள்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை, ஜூலை 4– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள்மற்றும்பயறு வகைத் தொகுப்புகளைவழங்கினார். மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை […]

Loading

செய்திகள்

“மக்கள் குரல்-’’ ஆசிரியர் எம்.எஸ். 98வது பிறந்த நாள்; கண் மருத்துவ முகாம்

சென்னை, ஜூலை 4 “மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர்”- பத்திரிகைகளில் நிறுவன ஆசிரியர் எம் சண்முகவேலின் (எம்.எஸ்) 98 ஆவது பிறந்தநாள் விழா, மக்கள் குரல் அலுவலகத்தில் இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர். முத்துக்குமார், செயல் இயக்குனர் பி. ஜீவானந்தம், ஆசிரியர் குழு, நிர்வாகம் -அச்சுப் பிரிவு ஊழியர்கள் அனைவரும் ஆசிரியரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஆசிரியர் ஆர். முத்துக்குமாரின் தாயாரும், நிறுவன […]

Loading

செய்திகள்

ரிதன்யா தற்கொலை : ஜாமீன் மனு மீதான விசாரணை 7 ந் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பூர், ஜூலை 4– ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான கணவர், மாமனார் ஜாமின் கோரிய மனுவுக்கு எதிராக ரிதன்யாவின் பெற்றோர் தாக்கல் செய்த இடையீட்டு மனு விசாரணையில், கால அவகாசம் கேட்டதால், விசாரணை வரும் 7 ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28 ந்தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் […]

Loading

செய்திகள்

மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: காதலன் உள்பட 3 பேர் கைது

மேலூர், ஜூலை 4– மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையம்:

சென்னை, ஜூலை 4– மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்கத்துறையின் பிரத்யேக பயிற்சி மையத்தை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2007-ல் நிறுவப்பட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. […]

Loading