செய்திகள்

காமராஜரின் உயர்ந்த சிந்தனைகளும் சமூக நீதி உறுதிப்பாடும் ஊக்கமளிப்பவை

டெல்லி, ஜூலை 15– காமராஜரின் உயர்ந்த சிந்தனைகளும் சமூக நீதி உறுதிப்பாடும் ஊக்கமளிப்பவை என்று பிரதமர் பிரதர் மோடி காமராஜரின் பிறந்த நாளில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், இவரது புகழை போற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக நீதி சிந்தனைகள் […]

Loading

செய்திகள்

போரை 50 நாளில் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரி

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன், ஜூலை 15– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேற்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் நடந்த சந்திப்பில், உக்ரைனுடனான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத ‘இரண்டாம் நிலை வரி’ (secondary tariffs) விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமின்மை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய டிரம்ப், உக்ரைனுக்கு ‘உயர்தர’ ஆயுதங்களை, நேட்டோ நாடுகளின் செலவில், […]

Loading

செய்திகள்

கமல்ஹாசன் ஜூலை 25 ந்தேதி மாநிலங்களவை எம்.பி பதவி ஏற்கிறார்

மக்கள் நீதி மய்யம் அதிகாரபூர்வ அறிவிப்பு சென்னை, ஜூலை 15– மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், ஜூலை 25 ந்தேதி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்ய சபா எம்.பி) பதவியேற்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் எப்போது […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை, ஜூலை 15– 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யபடுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்து 500 ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை […]

Loading

செய்திகள்

லண்டனிலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்தது: 4 பேர் பலி

லண்டன், ஜூலை 15– இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 4 பேர் பலி அப்போது ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்ற […]

Loading

செய்திகள்

ஆக்ஸியம்-4 குழுவினர் பூமி திரும்பும் பயணம் துவங்கியது

சுக்லாவின் சாகசம் விண் ஆய்வில் புதுமைல்கல் விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், “கிரேஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று மாலை 4:50 மணியளவில் […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை துரத்தி சென்று மடக்கிப் பிடித்த ரெயில்வே போலீசார்

சென்னை, ஜூலை 14– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை ஆர்பிஎப் போலீசார் துரத்தி சென்று கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வியாசர்பாடியைச் சேர்ந்த பயணிகளின் செல்போன்கள் திருட்டு தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுக் குழுவினர், சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டது. பின்னர், அந்த ஆசாமி […]

Loading

செய்திகள்

அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூலை 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், 4 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார். 1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், (தமிழ்நாடு மின்சார வாரிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்) 2. ககன்தீப் சிங் பேடி, ( ஊரக […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் ரெயில் தீ விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருவள்ளூர், ஜூலை 14– திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழித்தடத்தில் தற்போது மின்சார ரெயில் சேவை சீரானது. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. . இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து […]

Loading

செய்திகள்

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

ஜெருசலேம், ஜூலை 14– காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2023 அக்டோபரில் போர் துவங்கியது. இந்நிலையில் 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில் […]

Loading