செய்திகள்

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 3–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை 4–வது அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி :

சென்னை, ஜூலை 16– மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 3–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை 4–வது ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (அலைச்சறுக்கல்) தமிழ்நாடு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் (சர்ஃபிங்கில்) தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த சர்வதேச போட்டியில் சுமார் 150 விளையாட்டு வீரர்கள் போட்டியிட உள்ளார்கள். […]

Loading

செய்திகள்

அரியலூர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரியலூர், ஜூலை.16- அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று அரியலூரில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று அரியலூருக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து, ஒரு ஓட்டலில் […]

Loading

செய்திகள்

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு

சென்னை, ஜூலை 16– கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி […]

Loading

செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினிடம் பேசுங்கள்: இந்தியா, சீனா வுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க், ஜூலை 16– உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேசாவிட்டால், கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘வரி விதிப்பு’ எச்சரிக்கை மீண்டும் சர்வதேச அளவில் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 50 நாள்களுக்குள் உக்ரைனுடன் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன்: சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்

திருவனந்தபுரம், ஜூலை 16– மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிகிச்சை முடிந்து 10 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 5 ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் உள்ள மினசோட்டாவில் மாயோ மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த சிகிச்சைக்கு பின் பினராயி விஜயன் தனது மனைவி கமலா விஜயனுடன் கேரளா திரும்பினார். நாடு திரும்பிய பினராயி […]

Loading

செய்திகள்

இண்டர்னெட் சேவை இல்லாமல் உரையாடும் புதிய செயலி

எக்ஸ் இணை நிறுவனர் அறிமுகம் நியூயார்க், ஜூலை 15– இணைய சேவை இல்லாமல் உரையாடும் (CHAT) வகையில் “BITCHAT” என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார். டுவிட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் செயல்படும் ‘பிட்சாட்’ (BITCHAT) என்ற புதிய செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது […]

Loading

செய்திகள்

பூமிக்கு புறப்பட்ட சுபன்ஷு விண்கலம் பசிபிக் கடலில் தரையிறங்கியது

நியூயார்க், ஜூலை 15– சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கிய டிராகன் விண்கலம், இன்று மாலையில் பசிபிக் கடலில் தரை இறங்கியது. 2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி […]

Loading

செய்திகள்

ரூ. 6 கோடி முன் பணத்தை திரும்பத்தரக்கோரி வழக்கு: நடிகர் ரவி மோகன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை 15– படத் தயாரிப்புக்காக பெற்ற ஆறு கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப அளிக்கக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களை […]

Loading

செய்திகள்

நடிகை சரோஜா தேவி உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெங்களூரு, ஜூலை 15– நடிகை சரோஜா தேவியின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது 87. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் […]

Loading

செய்திகள்

ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை ‘திடீர்’ நிறுத்தம்

ஏமன், ஜூலை 15– கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்னும் நர்சுக்கு ஏமன் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை இன்று (செவ்வாய்) திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில் இன்று அத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சத்தின் நடவடிக்கையை அடுத்து, ஏமன் அரசு, இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. வயது 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். […]

Loading