செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

புதுடெல்லி, ஜூலை 18– வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் வருகின்ற ஜூலை 24ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.மேலும், இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்:

வாஷிங்டன், ஜூலை 18– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கடலூர், ஜூலை 18– கடலூரில் அண்ணா தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-2021ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதுமட்டுமில்லாமல், இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் […]

Loading

செய்திகள்

காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி

காசா, ஜூலை 18– காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், போரினால் வீடுகளை இழந்து அங்கே தங்கி இருந்தவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 2 பேர் பலி இந்நிலையில், […]

Loading

செய்திகள்

பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது

செண்னை, ஜூலை 18– நடப்பு கல்வியாண்டில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை இன்று (18–ந் தேதி) முதல் நடைபெறுகிறது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறலாம். இப்பயிற்சி குறித்த விவரங்களையும், பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தினையும் கலை பண்பாட்டுத்துறையின் […]

Loading

செய்திகள்

மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்

சென்னை, ஜூலை 18– மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மே 2, 2025 அன்று, சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில், மதுரை ஆதீனம் தனது கார் […]

Loading

செய்திகள்

குடும்ப அரசியலை விமர்சித்த நான் தற்போது வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன்’’: வைகோ புலம்பல்

விழுப்புரம், ஜூலை 18– குடும்ப அரசியலை விமர்சித்த நான், தற்போது வாரிசு அரசியல் என்ற பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். விழுப்புரம், ஆனந்தா மண்டபத்தில் ம.தி.மு.க., மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் கால கட்டங்களில் ம.தி.மு.க., செத்துவிட்டதென ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதங்கள் நடக்கிறது. ஆனால், கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதனை பொய்யாக்கி, 31 ஆண்டுகளாக காத்து […]

Loading

செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு

நெல்லை, ஜூலை 18– நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், பள்ளி பஸ்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால், மாணவன், பள்ளிக்கு வரும் போது, பூச்சி மருந்து சாப்பிட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி […]

Loading

செய்திகள்

மேற்குவங்கம், பீகார் மாநிலங்களில் இன்று ரூ.12,000 கோடி திட்டங்களுக்கு மோடி அடிக்கல்

டெல்லி, ஜூலை 18– பீகார் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு மாநிலங்களிலும் சுமார் ரூ.12,200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும், சில திட்டங்களை திறந்து வைப்பதுமாகும். இந்தத் […]

Loading

செய்திகள்

காமராஜரை அசிங்கப்படுத்திய பின்னரும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?

சென்னை: ஜூலை 17– ‘‘தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா?” என தமிழக பாரதீய ஜனதா கட்சி (பாஜக) முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இன்று (வியாழன்) அண்ணாமலை கூறியதாவது:– ‘‘அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு தி.மு.க.,வே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள். […]

Loading