செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஆகஸ்ட் 1–ந் தேதி முதல் புதிய பயண அட்டை

சென்னை, ஜூலை 22– சென்னை மெட்ரோ ரெயிலில் ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்றும் தேசியபொது போக்குவரத்து அட்டையை பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் சிஎம்ஆர்எல் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றப்படவுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சிஎம்ஆர்எல் பயணஅட்டையுடன் […]

Loading

செய்திகள்

தங்கம், வெள்ளி விலைகள் இன்று அதிரடியாக உயர்வு: சவரனுக்கு ரூ.840 கூடுதல்

சென்னை, ஜூலை 22– ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ74,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாகவே நிலைத்தன்மையற்றதாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.840 உயர்வு இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் […]

Loading

செய்திகள்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் :

சென்னை, ஜூலை 22– நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கோவி. செழியன், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் […]

Loading

செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர லாபம் ரூ.1,111 கோடி; இதுவரை இல்லா உச்சம்

சென்னை, ஜூலை 22– இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 75.75% உயர்ந்து ரூ.1,111 கோடியாக உயர்ந்துள்ளது. லாபம் 40.70% அதிகரித்து ரூ.2,358 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 12.50% அதிகரித்து ரூ.2,746 கோயடியாகவும் உயர்ந்துள்ளது. நிகர வட்டி நடப்பு ஆண்டு ஜூன் 30ந் தேதி 3.04% ஆக இருந்தது. வருமானத்தின் செலவு 754 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு 44.22%ஆக பதிவாகியுள்ளது. சொத்துக்கள் மீதான வருவாய் 44 அடிப்படைப்புள்ளிகள் உயர்ந்து 1.14% ஆக உள்ளது […]

Loading

செய்திகள்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவா பதவி ஏற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம்

சென்னை. ஜூலை.22- சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டில் 54-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் சென்னை ஐகோர்ட்டின் 36-வது தலைமை நீதிபதியாகவும் இவர் […]

Loading

செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா

புது டெல்லி, ஜூலை 22- இந்திய குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தாங்கர் உடல்நல சிக்கல்கள் காரணமாகக்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ஆர்டிக்கிள் 67(a) பிரிவின்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் ஜகதீப் தாங்கர் வழங்கியுள்ளார். தாங்கர் தனது கடிதத்தில், ஜனாதிபதி முர்முவுக்கும் பிரதமரான நரேந்திர மோடிக்கும், அமைச்சரவையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 2022‑இல் துணைத் தலைவா் பதவியை ஏற்றுக்கொண்ட தாங்கர், தனது பதவி காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் தற்பொழுது […]

Loading

செய்திகள்

தென்காசி அருகே விஷ வண்டு கடித்து கணவன், மனைவி உயிரிழப்பு

தென்காசி, ஜூலை 21– தென்காசி அருகே விஷ வண்டு கடித்து கணவன் – மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷ வண்டு கடித்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி அருகே சிவநல்லூர் என்ற கிராமம் உள்ளது. தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோவிலில் விஷேஷ நிகழ்ச்சிக்காக அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அவ்வூரை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் வழிபட்டு அன்னதானத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது […]

Loading

செய்திகள்

‘கடைசி வாய்ப்பு; வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை உடனே வழங்குங்கள்’: – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 21– கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வன்னியர்களுக்கு உடனே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-– தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாட்களாகியும், அதை செயல்படுத்தியத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உடனடியாக உள் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வின் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கை: மக்களிடம் ஓடிபி பெற ஐகோர்ட் மதுரை கிளை தடை

சென்னை, ஜூலை 21– சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் நேற்றுடன் (20–ந் தேதி) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறுஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட […]

Loading

செய்திகள்

ரூ.3,500 கோடி மதுபான ஊழல்: ஜெகன்மோகன் மாதந்தோறும் ரூ.60 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்

அமராவதி, ஜூலை.21- ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதுபான ஊழலில் கிடைத்த லஞ்ச பணம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர போலீஸ் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது, மதுபான விற்பனையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான […]

Loading