செய்திகள்

விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்: 26-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

தூத்துக்குடி, ஜூலை 23–- அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26–ந்தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரம் நேற்று அதிகாரப் பூர்வமாக வெளி யிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-– வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பிரதமர் மோடி மாலத்தீவு தலைநகரம் மாலே விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் புறப்படுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் […]

Loading

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஜூலை.23- சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 29). பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின்பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் டிஜிட்டில் கைது என்று கூறி ரூ.75 லட்சம் மோசடி: கேரள ஆசாமி கைது

ஆவடி, ஜூலை 23– ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அம்பத்தூர், ராம் நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை செல்போனில் அழைத்து நபர், தன்னை மும்பை குற்றப்பிரிவு சிறப்பு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் ரவியை டிஜிட்டில் கைது செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயனந்து போன ரவி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.75,50,00 அனுப்பி உள்ளார். பின்பு தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்திய நடுத்தர வர்க்கத்தின் கிரிப்டோ கனவு: பாதுகாப்பு & ஒழுங்குமுறையின் அவசியம்!

இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் இதயத்தில் ஒரு கனவு உள்ளது – அது நிதி சுதந்திரம் பற்றிய கனவு, வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பைக் கண்டுபிடிப்பது. பலருக்கு, கிரிப்டோகரன்சி அந்தக் கனவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் வடிவிலான சொத்து என்பதுடன் பலருக்கும் உற்சாகம் தருவதாக உள்ளது. மேலும் மிக முக்கியமாக, எந்த வங்கியும் அல்லது நிலையான வைப்புநிதியும் கொடுக்க முடியாத வருமானத்தை இது உறுதியளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு பளபளப்பான நாணயத்திற்கும் ஒரு மறுபக்கம் […]

Loading

செய்திகள்

கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

கும்பகோணம், ஜூலை.22- காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்ணுக்கு தெரியவில்லை. கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக் கொண்டு இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். பிரசார பஸ்சில் நின்றபடி அவர் பேசியதாவது:- தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது

புதுடெல்லி, ஜூலை 22– எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் 2வது நாளாக நாடாளுமன்ற முடங்கியது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்றிரவு மருத்துவக் […]

Loading

செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை

மதுரை, ஜூலை 22– அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை இன்று விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய […]

Loading

செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள்: 4 ஐ.டி. ஊழியர்கள் உள்பட 7 பேர் கைது

சென்னை, ஜூலை 22– நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 4 ஐ.டி. ஊழியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் […]

Loading

செய்திகள்

தேனாம்பேட்டை அப்போலோவில் பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ திரும்பினார்

சென்னை, ஜூலை 22– அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள […]

Loading

செய்திகள்

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு: பொது விடுமுறை அறிவிப்பு

இன்றும் நாளையும் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி திருவனந்தபுரம், ஜூலை 22– கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக திகழ்ந்த அச்சுதானந்தன் மறைவு, கட்சி தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தர்பார் ஹாலில் […]

Loading