செய்திகள்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து–கம்போடியா ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 27– தாய்லாந்து, கம்போடியா உடனடியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவது அவரது வழக்கம். இஸ்ரேல்–ஈரான் மற்றும் இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை சொல்லி உள்ளார். தற்போது, தாய்லாந்து–கம்போடியா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தான் […]

Loading

செய்திகள்

‘ஓலைச்சுவடி அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தஞ்சை மணிமாறன்

மோடி பாராட்டு புதுடெல்லி, ஜூலை 27– ”ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது,” என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: தொடர்ந்து நமது நாட்டு மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேசுவோம். சமீபத்தில் விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது […]

Loading

செய்திகள்

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூலை 27– தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலர் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் நடிகர் […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி: 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

 திருச்சி, ஜூலை 27– திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை […]

Loading

செய்திகள்

அமெரிக்கா டென்வெர் விமான நிலையத்தில் 173 பேருடன் சென்ற விமானத்தில் திடீர் தீ

வாஷிங்டன், ஜூலை 27– அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் 173 பயணிகள் 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேற்கு அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு […]

Loading

செய்திகள்

ஹரித்வார் மானசா தேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

டேராடூன், ஜூலை 27– உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த துயர சம்பவம், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நடந்துள்ளது. கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளப்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து கார்வால் கோட்ட ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே கூறுகையில், நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு மானசா […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்பு

காவிரி காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சேலம், ஜூலை 27– மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரி காரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது. […]

Loading

செய்திகள்

நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூலை 27– நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சாலை விபத்துகள், ரேபிஸ் தொற்று […]

Loading

செய்திகள்

ஈரோடு அருகே உடல்நிலை பாதிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

ஈரோடு, ஜூலை 27– ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உடல்நிலை பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டும், மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிக்கப்பட்டதால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்று […]

Loading

செய்திகள்

2–ம் சுற்று என்ஜினீயரிங் கலந்தாய்வு துவங்கியது

சென்னை, ஜூலை.27- என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 14-ந் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 16-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், 17-ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெளியிட்டும், 17 மற்றும் 18-ந் தேதிகளில் அந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படியாக நடந்த முதல் சுற்று கலந்தாய்வில் […]

Loading