செய்திகள்

கூடுவாஞ்சேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் அதிரடி சோதனை; கஞ்சா சாக்லேட் பறிமுதல்

ஒருவர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் தகவல் தாம்பரம், ஜூலை 28– கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது என தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் கூறினார். தாம்பரம் காவல் துறை கமிஷனர் அபின் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடுவாஞ்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகள், வீடுகள், கடைகள், ஓட்டல்களில் 100 போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். போலீசார் சோதனையில் கஞ்சா சாக்லேட்டுகள், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் […]

Loading

செய்திகள்

இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் போர் ட்ரோன் ஒப்பந்தம்

புதுடில்லி, ஜூலை 28– இந்தியா- அமெரிக்கா இடையே போர் ட்ரோன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ட்ரோன்கள் இந்தியா வந்தடையும். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு […]

Loading

செய்திகள்

மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை: ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஜூலை 28– “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2–ந் தேதி அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையொட்டி இப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் […]

Loading

செய்திகள்

சென்னையில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: மணிப்பூர் பெண் கைது

சென்னை, ஜூலை 28– மடிப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் செய்யப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, போதைப் பொருட்களை வைத்தருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு

தண்ணீரை சீரான முறையில் பயன்படுத்த விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள் சென்னை, ஜூலை 28– மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும், அணையின் முழுகொள்ளளவான 120 அடியில் உள்ளதாலும், நீர்வளத்துறை அலுவலர்களால் உபரிநீர் திறந்து விடுவதை சீரான முறையில் அனுப்பிடவும், அந்நீரினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் […]

Loading

செய்திகள்

ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்

பெர்லின், ஜூலை 28– ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவர்

சென்னை, ஜூலை 28– சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை ஐஐடி மாணவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து இன்று காலை துர்காப்பூருக்கு இண்டிகோ விமானம் ஊழியர்கள் உள்பட 164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது 27 வயதான இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றிருக்கிறார். இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தான் அவசர கால கதவை திறக்கும் […]

Loading

செய்திகள்

அனுமதியின்றி பதிவு செய்து திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை

மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் புதுடெல்லி, ஜூலை.28- திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், உடனுக்குடன் சில இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:- திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து வெளியிடுவதை திரைப்பட சட்டத்தின் 6ஏஏ மற்றும் 6ஏபி பிரிவுகள் தடை செய்கின்றன. […]

Loading

செய்திகள்

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டம்

ஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் சென்னை, ஜூலை.28- விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை தகவல்கள், பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தரவுகளை பெறுவதற்காக விண்ணில் 55 செயற்கைக்கோள்களின் தொகுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் […]

Loading

செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி: மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை

காஞ்சீபுரம், ஜூலை 27– நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரி இடஒதுக்கீட்டுக்கு காத்திருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மகள் 18 வயது இளம்பெண். அவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு எழுதி 502 மதிப்பெண் பெற்றிருந்தார்.இந்த […]

Loading