செய்திகள்

எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி, ஜன. 13– டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14–ந்தேதி) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை (14–ந்தேதி) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார். இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருப்பூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவரம்

திருப்பூர், ஜன. 13– துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணி […]

Loading

செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேர விசாரணை நிறைவடைந்தது: சென்னை திரும்பினார் விஜய்

புதுடெல்லி, ஜன. 13– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் 7 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் அவர் புதுடெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். மீண்டும் 19–ந் தேதி ஆஜராக சம்மன் சிபிஐ சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு சென்றார். அங்கு பிரச்சார பஸ்சில் நின்று பேசினார். அப்போது […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம் தங்கம் சவரன் – ரூ.1,05,360: வெள்ளி கிலோ ரூ.2.92 லட்சம்

சென்னை, ஜன. 13– தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 900-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.220 உயர்ந்து கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்

தாம்பரம், ஜன.13- தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார். ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் – தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவர்கள் பங்கேற்று, 800-க்கும் மேற்பட்ட வியக்கத்தக்க தங்கள் […]

Loading

செய்திகள்

வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போட்டிகளோடு டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் குதூகலப் பொங்கல் விழா

சென்னை, ஜன.13– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் ‘தைத்திருநாள் பொங்கல் விழா’ மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் புனிதமான ‘கோ-பூஜை’யுடன் பொங்கல் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகள் தொடங்கின. கல்லூரி வளாகத்தில் அச்சு அசலாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமம் அனைவரையும் ஈர்த்தது. சிலம்பாட்டத்தின் வேகம், உறியடியின் உத்வேகம், கண்கவர் ரங்கோலி கோலங்கள் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் மாணவர்களால் மீட்டெடுக்கப்பட்டன. இவை தவிர, […]

Loading

செய்திகள்

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி துவக்கம் அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்

சென்னை, ஜன.13- சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் வரை நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துப்படுவது வழக்கம். முதல் பொருட்காட்சி கருணாநிதியால் 1974-–ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 50-வது ஆண்டில் இந்த பொருட்காட்சி அடியெடுத்து வைத்துள்ளது. பொன்விழா பொருட்காட்சியை அமைச்சர்கள் இரா.ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று […]

Loading

செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

புதுடெல்லி, ஜன. 12– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக […]

Loading

செய்திகள்

17 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த ‘‘பி.எஸ்.எல்.வி. சி–62 ராக்கெட் திட்டம் தோல்வி’’: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12– ‘‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி–62 (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதால், தோல்வி அடைந்ததாக’’ ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்–1 என்ற செயற்கைக்கோளுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் […]

Loading

செய்திகள்

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்சி, ஜன. 12– திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து […]

Loading