செய்திகள்

சென்னை பறக்கும் ரெயில் சேவை – மெட்ரோ ரெயிலுடன் இணைக்கும் திட்டம்: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஆக. 2– சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவையை இணைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக […]

Loading

செய்திகள்

2023 தேசிய திரைப்பட விருதுகள்: ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று விருதுகளை வென்று சாதனை

புது டெல்லி, ஆக. 1 – 2023-ஆம் ஆண்டுக்கான 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ் சினிமா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று விருதுகளை வென்றுள்ளது. மேலும், நடிகை உர்வசி ‘உள்ளொழுக்கு‘ என்ற மலையாளப் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றுள்ளார். முக்கிய விருதுகள் ஒரு பார்வை: ‘பார்க்கிங்’ திரைப்படம், சமூக உறவுகள் மற்றும் […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா :ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக 1– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-–ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் […]

Loading

செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ

சென்னை, ஆக. 1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மு.க.முத்து மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன். நெல்லை கடேிசி நகரில் என்ஜினியரிங் கவின் படுகொலையில் அரசு எடுத்த […]

Loading

செய்திகள்

செப்டம்பர் 9–ந்தேதி துணை ஜனாதிபதி தேர்தல்

புதுடெல்லி, ஆக. 1– துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. நாட்டின் 14வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அவரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய […]

Loading

செய்திகள்

 ஸ்ரீதேவி, சத்யராஜ், பிரபுவுக்கு லக்ஷ்மண் (ஸ்ருதி) டூப்

சென்னை, ஆக.1- உலக சாதனை படைத்திருக்கும் மேடை திரைப்பட மெல்லிசைக் குழுவின் நிறுவனர் லக்ஷ்மண் ஸ்ருதியை திரை இசை விருந்து படைக்கும் படைப்பாளி, ‘மிமிக்ரி’ கலைஞர் என்று தானே தெரியும் வெளி உலகுக்கு? ஆனால் அவர் – தமிழ் சினிமாவில் நடிகர்கள் சத்யராஜ், பிரபு, நடிகை ஸ்ரீதேவிக்கு ஸ்டண்ட் காட்சிகளில் ‘‘டூப்’’ போட்டிருக்கும் நடிகர் என்ற ஒரு தகவலை அவர் வாயால் சொல்லக் கேட்டதும் பார்வையாளர்கள் பலரும் அதிசயித்துப் போனார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் லக்ஷ்மண் […]

Loading

செய்திகள்

கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் பலி

வையம்பட்டி, ஆக. 1– கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது? கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலவெளியூரை சேர்ந்தவர் முத்து (67). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 20-ந்தேதி மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 1– 20-ந்தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:- சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக […]

Loading

செய்திகள்

5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை, ஆக. 1– ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியை. பணிக்கு செல்ல வசதியாக தூத்துக்குடியில் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27-ந்தேதி […]

Loading

செய்திகள்

வீட்டில் தூங்கி்க் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தாக்கிய புலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வால்பாறை, ஆக. 1– வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை புலி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்கு உள்பட்ட மளுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்து, வீரன் குடி மலைப்பகுதியில் இன்று அதிகாலையில் சுமார் 2.15 மணியளவில் ராகுல் என்ற 4 வயது சிறுவன் தந்தை பேபியுடன் பிளாஸ்டிக் சீட்டால் மூடப்பட்ட குடிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே […]

Loading