சென்னை, ஆக. 2– சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவையை இணைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக […]
![]()











