செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்து 11 பேர் பலி

லக்னோ, ஆக. 3- உத்தரப்பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த 11 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ 11 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேருடன் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: […]

Loading

செய்திகள்

ஊர் ஊராகப் போய் எடப்பாடி பொய் பிரச்சாரம்: ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை, ஆக.3- ஊர் ஊராகப் போய் டப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவுநாளான வரும் 7-தி தேதி அன்று சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி நடைபெற உள்ள அமைதி பேரணியில் தொண்டர்கள் கடலென திரன தொண்டர்களுக்கு மு.சு. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நான்காண்டுகால திராவிட […]

Loading

செய்திகள்

‘‘மக்களவைத் தேர்தலில் மோடி மோசடி’’: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஆக 2– போலி வாக்காளர்கள் மூலம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகக் குற்றச்சாட்டி உள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. மகாராஷ்டிரத்தை போன்று பீகாரிலும் வாக்கு திருட்டுக்கு பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் […]

Loading

செய்திகள்

நடுவானில் விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னை, ஆக. 2– கொல்கத்தாவில் இருந்து 170 பேருடன் இன்று சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு அலறித்துடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு விரைந்த அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக நெஞ்சுவலியால் துடித்த பயணி, விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Loading

செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரு கண்கள் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– நான் நன்றாக இருக்கிறேன்! நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்னால், காலையில் வாக்கிங் […]

Loading

செய்திகள்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்

திருப்பூர், ஆக. 2– உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 2 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழக-கேரள எல்லையில், உடுமலை-மூணாறு மலைப்பாதையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநில அரசு பஸ் மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடியில் அந்த பஸ்சை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது […]

Loading

செய்திகள்

3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள்:

சென்னை, ஆக. 2– சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர், கோவை – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்கான சாத்திய கூறுகயை ஆய்வு செய்ய பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ரயில் நியமித்தது. தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சிறப்பு விவாதம்: மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

புதுடெல்லி, ஆக.2-– வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதன் மூலம் ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வலியறுத்தி போராடி வருகின்றன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி தினமும் அமளியில் […]

Loading

செய்திகள்

மீண்டும் புதிய உச்சம்: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னை, ஆக.2– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட்– 1) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 9,150 ரூபாய்க்கும், சவரனுக்கு […]

Loading

செய்திகள்

தெற்கு ரெயில்வே புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக அருள் ஜோதி பொறுப்பேற்பு

சென்னை, ஆக. 2– தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக கே. அருள் ஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார். தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதன்மைத் தலைவர், பாதுகாப்பு ஆணையர் மற்றும் பாதுகாப்புப் படையின் பொறுப்பை ஏற்றக் கொண்டு அருள் ஜோதி, 1995 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை பிரிவின் அதிகாரியான கே. அருள் ஜோதி, வடக்கு எல்லைப்புற ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை/சென்னை, […]

Loading