செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ரெயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு, சோதனை

சென்னை, ஆக. 14– சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 79-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல, சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்படவுள்ளது. தமிழக ரயில்வே காவல் துறையை மற்றும் மத்திய ரெயில்வே பாதுகாப்புப் படை பிரிவினர் சென்னை ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Loading

செய்திகள்

கொடிக்கம்பங்களை அகற்ற தடையில்லை: மதுரை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு

மதுரை, ஆக.14-– சாலையோரங்களில் அமைக்கப் பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து மதுரை ஐகோர்ட் 3 நீதிபதிகள் அதிரடியாக உத்தர விட்டனர். இதனால் சாலையோர கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சாலை யோரங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் தனி […]

Loading

செய்திகள்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு:

சென்னை, ஆக. 13– சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15–ந் தேதி 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித […]

Loading

செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்

சென்னை, ஆக. 12– அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியலில் பாஜ – அதிமுக – பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார். 2002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா […]

Loading

செய்திகள்

தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வந்த 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம், ஆக. 13– விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வந்த 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான். விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 7 மணியளவில் சிறப்பு வகுப்பிற்காக வழக்கம்போல் வீட்டில் இருந்து மோகன்ராஜ் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளி வளாகத்தின் […]

Loading

செய்திகள்

தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ. 23.50 லட்சம்: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஆக 13– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியியின் கீழ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவுகளுக்காகவும், உயர்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவும், 23–வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் -2025 போட்டியை நடத்துவதற்காகவும் மொத்தம் 23.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். கேலோ இந்தியா இளையோர் மும்முறை தாண்டுதல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ். ரவிபிரகாஷ்க்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக 1 […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்

திருவாரூர், ஆக. 13– திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தான […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று காலை 4 ஆயிரம் கனஅடி நீர்வரத்து குறைவு

தருமபுரி, ஆக. 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் […]

Loading

செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யும் ‘தாயுமானவர் திட்டம்’

சென்னை, ஆக.12– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் […]

Loading

செய்திகள்

2 குழந்தைகளை கொன்ற வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை

சென்னை, ஆக. 12– 2 குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு மனுவிற்கு பதிலளிக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான […]

Loading