செய்திகள்

தர்மபுரி மாவட்டத்திற்கு ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகள்

தர்மபுரி, ஆக.17– தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:– 1. – சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் […]

Loading

செய்திகள்

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் உயிரிழப்பு

சென்னை, ஆக. 17– திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில், ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில் திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், […]

Loading

செய்திகள்

ராமநாதபுரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம், ஆக. 17– வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நேற்று முன் தினம் இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் […]

Loading

செய்திகள்

வி.ஜி.சந்தோசத்தின் 89வது பிறந்த நாள் விழாவில் 186வது திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை, ஆக. 17– விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 89ம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட்டில் வள்ளுவர் கார்டன் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றது. மேலும் பிறந்தநாள் விழாவில் முக்கிய பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு வி.ஜி. சந்தோசத்தை நேரில் வாழ்த்தினர். தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது […]

Loading

செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு

திருவண்ணாமலை ஆக.17- ‘பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நேற்று காலை திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளோடு எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘’விவசாயிகள் நெசவாளர்கள் நலனுக்காக கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசுக்கு […]

Loading

செய்திகள்

இறக்குமதி வரியை டிரம்ப் உயர்த்தியதன் எதிரொலி: ‘‘தமிழகத்தில் லட்சக் கணக்கில் வேலை இழக்கும் அபாயம்’’

மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கடிதம் சென்னை, ஆக 16– இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இன்று (16–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், […]

Loading

செய்திகள்

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

தி.மு.கவினர் தர்ணா போராட்டம்; பரபரப்பு திண்டுக்கல், ஆக. 16– திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக இன்று காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி […]

Loading

செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading

செய்திகள்

வாஜ்பாய் நினைவுநாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

புதுடெல்லி, ஆக. 16– இன்று வாஜ்பாய் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996ல், 13 நாட்கள்; 1998 முதல் 13 மாதங்கள்; 1999 – 2004 வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். அவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி […]

Loading

செய்திகள்

சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ‘ரேபிஸ்’ பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை : தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, ஆக 16– நாய்களின் வெறிச்செயலால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகரத்திற்குட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை […]

Loading