செய்திகள்

நெல்லையில் அமித்ஷா தலைமையில் 22ம் தேதி பாஜக மண்டல மாநாடு

நெல்லை, ஆக. 18– நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அண்ணா தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். வடமாநிலங்களில் பா.ஜ.க. கொடிக்கட்டி பறக்கும் நிலையில், […]

Loading

செய்திகள்

21–ந்தேதி மாநில மாநாடு: த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

‘மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும்’ என உறுதி சென்னை, ஆக. 18– மதுரை பாரப்பத்தியில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த […]

Loading

செய்திகள்

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 2வது நாளாக இன்றும் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

சென்னை, ஆக. 18– தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு 2வது நாளாக இன்றும் 10 நிமிடங்களில் முடிந்தது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு 17–ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் கிளம்புவார்கள். இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக அக்டோபர் 16–ந் […]

Loading

செய்திகள்

‘வாக்குகள் திருட்டு’ என்று சொல்வது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி

புதுடெல்லி, ஆக.18- ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷன் அஞ்சாது. தேர்தல் கமிஷனின் தோள் மீது ஏறி சில அரசியல் கட்சிகள் சுடுகின்றன என்று தலைமை தேர்தல் கமிஷனர் கூறினார். பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அந்த […]

Loading

செய்திகள்

பா.ம.க.வினர் விரும்பும் நல்லதொரு கூட்டணி உருவாகும்: பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

சென்னை, ஆக.18- வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வினர் விரும்பும் நல்லதொரு கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். புதுவை அடுத்த பட்டானூரில் நேற்று நடந்த பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கான தீர்மானங்கள் தான். தமிழ்நாட்டில் உள்ள 324 சமுதாய மக்களுக்காகத்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது, நமக்கு 10.5 […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி, ஆக.18- துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 68) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனா திபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை […]

Loading

செய்திகள்

கவர்னரை வைத்து இழிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.

தர்மபுரி, ஆக.17– கவர்னரை வைத்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் […]

Loading

செய்திகள்

மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்

மதுரை, ஆக.17– மதுரை மாவட்டம் மேலூர் அருகே மகளை திருமணம் செய்த வாலிபரை காரில் மோதி மாமனார் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21), தும்பை பட்டி ராகவி (வயது 24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது […]

Loading

செய்திகள்

விண்ணப்பித்த அன்றே விவசாய பயிர்க்கடன் வழங்கும் முன்னோடி திட்டம்

தர்மபுரி, ஆக.17– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும். 2025–-26–ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். விவசாயப் பெருங்குடி […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

சென்னை, ஆக. 17– தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்தும் முடிவடைந்தது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வது வழக்கம். தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படும். முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள். அதன்படி அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் […]

Loading