செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு […]

Loading

செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடெல்லி, ஆக. 18– சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீட் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை ஐ. பெரியசாமி அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை […]

Loading

பீகார் வாக்காளர் பெயர் பட்டியல்
செய்திகள்

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, ஆக. 18– பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் […]

Loading

செய்திகள்

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை

வேதாரண்யம், ஆக. 18– வேதாரண்யம் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி இயந்திர உரிமையாளர் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்று விசாரித்துள்ளார். […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி; சபாநாயகர் எச்சரிக்கை: இரு அவைகளும் ஒத்திவைப்பு

தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி போராட்டம் புதுடெல்லி, ஆக. 18– பீகார்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் […]

Loading

செய்திகள்

அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள்: அன்புமணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் காட்டமான பதில்

சென்னை, ஆக.18– சொந்த கட்சியில் பதற்றம் தீரும் வரை அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து- வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்’’ என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 […]

Loading

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்
செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254–வது நினைவு நாள்

சிலை, நினைவு தூணுக்கு 20–ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாலை: எடப்பாடி அறிவிப்பு சென்னை, ஆக.18– ஒண்டிவீரன் 254–வது நினைவு நாளையொட்டி 20–ந் தேதி பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அண்ணா தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254–வது வீரவணக்க […]

Loading

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஆக. 18– டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் ’தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி, கல்லூரிக்கு […]

Loading

செய்திகள்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது: டிரம்ப் உறுதி

வாஷிங்டன், ஆக. 18– அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய 2022ல் முயற்சித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தும் என்றும், இணையும் முயற்சியை கைவிடாவிட்டால் போர் […]

Loading