செய்திகள்

ஊரக, மீன்வள உள்கட்டமைப்புக்கு ரூ.4850 கோடி நிதி கேட்டு ஸ்டாலின் கடிதம்

நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது புதுடெல்லி, ஆக.20- டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்கள். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025–26ம் நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள […]

Loading

செய்திகள்

பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடையுள்ள செயற்கைக்கோள்: 40 மாடி உயர ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை, ஆக.20- பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவில் நாராயணன் பேசியதாவது:- […]

Loading

செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மிகச்சரியான தேர்வு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக.20-– ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை அறிவித்திருப்பது மிகச்சரியான தேர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஆக. 20– சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் […]

Loading

செய்திகள்

தாம்பரம் அருகே ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதி விபத்தில் மேலும் ஒருவர் பலி

சென்னை, ஆக. 18– தாம்பரம் அருகே இன்று அதிகாலை ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). இவர், ரேபிடோ நிறுவனத்தில் ‘பைக் – டாக்சி’ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் பால்ராஜ் தனது மோட்டார்சைக்கிளில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், தசாவர் நாயக்கர்பட்டியைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஆக. 19– கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுரையிலிருந்து நேற்றிரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அந்த […]

Loading

செய்திகள்

பயணிகள் விமானத்தில் தீ: 40 நிமிடங்கள் பறந்து பத்திரமாக தரையிறங்கியது.

ஏதென்ஸ், ஆக. 19– கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை 40 நிமிடங்கள் இயக்கி பத்திரமாக தரையிறக்கினர் விமானி. கிரீஸ் நாட்டின் கோர்பு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் நகருக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதில் 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில […]

Loading

செய்திகள்

கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை இல்லை

சென்னை, ஆக.19- கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சிக்கு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இது தங்களது வணிகச்சின்னம் என்றும், இந்த நிறங்களில் கொடியை பயன்படுத்த விஜய் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு

புதுடெல்லி, ஆக.19- டெல்லியில் பிரதமர் மோடியை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்து பேசினார். அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், எஸ்பேஸ் ஆக்சியம் நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்–-4 என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாட்டு வீரர்களுடன் சேர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி விண்வெளி நிலையம் சென்ற அவர், அங்கே […]

Loading

செய்திகள்

தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் 7 கேள்விகள்

சென்னை, ஆக. 18– இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். நேற்றைய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு பதிவில் கூறியிருப்பதாவது:– இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? 2. புதிய […]

Loading