செய்திகள்

சிறுகதை .. கத்தி போடும் திருவிழா..! விழா 40 …. ராஜா செல்லமுத்து

” சீக்கிரமா கொண்டு போங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு நினைக்கிறேன். எத்தன பேரு இந்த வேலைய செஞ்சாங்கன்னு தெரியல. இதெல்லாம் ரொம்ப தப்புங்க “ என்று ஒருவர் பதற, கதிர்வேலன், புஷ்பதுரை, பாலமுருகன் இன்னும் சில பேர் உடம்பில் பலமான காயங்களுடன் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அவர்களின் நிலையைப் பார்த்த அந்த மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் முதல் செவிலித்தாய் வரை ஓடி ஒதுங்கினார்கள். ” யாராவது ஸ்ட்ரெச்சர் எடுத்திட்டு வாரீங்களா? என்று ஒருவர் துடிக்க ” […]

Loading

செய்திகள்

மதுரையில் அலைஅலையென திரண்ட தொண்டர்கள் ‘ஜனநாயகன்’ விஜய்: இளைஞர்கள் குதூகலம்

மதுரை, ஆக. 21– த.வெ.க. மாநாட்டிற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே தொண்டர்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற […]

Loading

செய்திகள்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, ஆக. 21– டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று காலை முதலமைச்சர் ரேகா குப்தாவின் வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கு […]

Loading

செய்திகள்

1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்

தஞ்சாவூர், ஆக.21– தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில், இன்று காலை சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022–ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணை வினியோகம் தொடரும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, ஆக. 21– அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் இந்தியாவிற்கான ரஷ்யாவின் துணை வர்த்தக பிரதிநிதி […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு ஆவடி, ஆக. 21– சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15000 அபராதம் விதித்து திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு 6.01.2019 அன்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லி பாபு (22) என்பவர் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் […]

Loading

செய்திகள்

பொதுமக்கள் புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை: அதிகாரிகளுக்கு சென்னை கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை, ஆக. 21– சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 19 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி […]

Loading

செய்திகள்

2 வது தவெக மாநாடு: மதுரையில் திரண்ட தொண்டர்கள்!

மதுரை, ஆக. 21- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 21-க்கு மாற்றப்பட்டது. மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் இந்த மாநாடு 500 முதல் 600 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படுகிறது. 100 அடி உயர மேடை மற்றும் 200 மீட்டர் நீள ராம்ப் […]

Loading

செய்திகள்

130-–வது அரசியல் சட்டத் திருத்தம்: சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு நாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஆக.21- 130-வது அரசியல் சட்டத்திருத்தம் சீர்திருத்தம் அல்ல, அது ஒரு கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- 130-வது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பா.ஜனதா வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் […]

Loading

செய்திகள்

குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் பதவி பறிப்பு

நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் புதுடெல்லி, ஆக.21- குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்திய சட்டங்களின்படி பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறையில் இருந்தாலும் […]

Loading