செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி கண்டனம்

சென்னை, ஜன.17– கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்வதா? என தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து […]

Loading

செய்திகள்

ஈரானில் 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு

வாஷிங்டன், ஜன. 17– ஈரான் அரசு 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, […]

Loading

செய்திகள்

அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: ஸ்டாலின் அறிவிப்பு

அலங்காநல்லூர், ஜன. 17– ஜல்லிக்கட்டில் அதிகக் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. […]

Loading

செய்திகள்

‘‘மது விற்பதில் மட்டுமே தி.மு.க. அரசு சாதனை’’: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன.17– ‘‘போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பது மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது’’ என்று அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-– ‘‘தமிழ்நாட்டில் பொங்கல், போகிப்பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக […]

Loading

செய்திகள்

பாட்ரிஷியன் கலை – அறிவியல் கல்லூரியில் ஆண்கள் பொங்கல் வைக்கும் போட்டி

சென்னை, ஜன. 17– சென்னை, அடையாரில் அமைந்துள்ள பாட்ரிஷியன் கலை அறிவியல் கல்லூரி, ரேடியோ சிட்டியுடன் இணைந்து தை பொங்கல் பாரம்பரியத்துடனும் பெரும் உற்சாகத்துடனும் கொண்டாடியது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, ஆண் மாணவர்களுக்கான தனிப்பட்ட “ஆண்கள் பொங்கல் வைக்கும் போட்டி” நடத்தப்பட்டது. இதில் ஆண் மாணவர்கள் பொங்கல் சமைத்தது அவர்களின் பொறுப்பு மற்றும் பண்பாட்டு மரபினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.இவற்றுடன் கோலப் போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல், சாக்குப் பந்தயம் மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. […]

Loading

செய்திகள்

இந்துஸ்தான் – மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா இயக்குனர் சூசன் மாத்யூ ஏற்பாடு

சென்னை, ஜன. 17– இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மொழித்துறைத் தலைவர் மா. தென்கரை மகராஜ பிள்ளை அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் உத்திரா த. தலைமையுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பொங்கல் விழா என்பது தமிழ் கலாச்சாரத்தில் உள்ள நன்றி தெரிவிக்கும் விழா எனவும் நன்றி செலுத்துதல் தமிழ்ப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கம் எனவும் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, புகழ்பெற்ற பட்டிமன்ற […]

Loading

செய்திகள்

தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா

சென்னை, ஜன. 17– பொங்கல் திருநாளை யொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் அபிராமி நிதின் ஆகியோர் பொங்கல் பானைகளில் பால், அரிசி, வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை உள்ளிட்டவை இட்டு இந்த சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளான கும்மியடித்தல், […]

Loading

செய்திகள்

நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கினார் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ

வாஷிங்டன், ஜன. 17– தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித்தலைவர் மச்சாடோ, சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுப்பேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். அவர் அங்கு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை அமெரிக்க […]

Loading

செய்திகள்

சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளரின் நேர்மை: லலிதா ஜுவல்லரி அதிபர் எம். கிரண் குமார் பாராட்டு

சென்னை, ஜன. 17– நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி அதிபர் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். அதற்காக லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் டாக்டர் எம். கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார். “இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை,” என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக […]

Loading

செய்திகள்

பொங்கல் பரிசாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழகமுதலமைச்சர் ஸ்டாலின். வடகிழக்குப் பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டநிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும்வகையில், ரூபாய் 111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 33%-க்கு மேல் பயிர்சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்தார். பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 84,848 விவசாயிகள்பயன் பெறும் வகையில் நிவாரணத் தொகையாக ரூ 111.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில்பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண்மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின்வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 01.12.25 அன்று ஆய்வு கூட்டம்நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கணக்கெடுப்பு நெல் பணி உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாகஹெக்டேருக்கு ரூ. 20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில்மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால்பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணைஇன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும்2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தவேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில்ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அஉத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில்நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

Loading