செய்திகள்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா: தமிழகம் முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்

சென்னை, ஆக. 27– விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமா கொண்டாட்டப்பட்டது. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் குடும்பம் குடும்பாக சென்று விநாயகரை தரிசனம் செய்தனர். […]

Loading

செய்திகள்

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்: பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

புதுடெல்லி, ஆக. 27– பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய விநாயகர் சதுர்த்தி நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி […]

Loading

செய்திகள்

ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு

சென்னை, ஆக. 27– கேரளாவில் ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர் […]

Loading

செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு

சென்னை, ஆக. 27– ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட […]

Loading

செய்திகள்

நாளை விநாயகர் சதுர்த்தி: பூக்களின் விலை கடும் உயர்வு

சென்னை, ஆக. 26– நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கத்தைவிட இன்று பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை கடுமையாக உயர்ந்தது. குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். […]

Loading

செய்திகள்

மயிலை புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில்

சென்னை, ஆக 26– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் […]

Loading

செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் மின்சாரக் கார்: பிரதமர் மோடி இயக்கி வைத்தார்

ஆமதாபாத், ஆக. 26– குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மாருதி சுசூகியின் முதல் மின்சாரக் காரை கொடி அசைத்து பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி நேற்று மாலை ஆமதாபாத் நகரில் 3 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்ட சாலை பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் தொடங்கி வைத்தார். இந்நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி முதல் முறையாக மின்சாரக் காரை தயாரித்துள்ளது. […]

Loading

செய்திகள்

தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகள் திருட்டு: மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது

சேலம், ஆக. 26– தூத்துக்குடி நகைக் கடையில் தங்கக் கட்டிகளை திருடிவிட்டு ரெயிலில் மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி நகைக்கடையில் தங்கக் கட்டிகளை திருடிய இளைஞர் மும்பை தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில், சேலம் ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி […]

Loading

செய்திகள்

தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: காரணம் என்ன? தெற்கு ரெயில்வே விளக்கம்

சென்னை, ஆக. 26– தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு, நேற்று வழக்கம் போல் கோ.பவழங்குடி பகுதியை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் தனியார் வேனில் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டனர். வேனை விஜயமாநகரத்தை சேர்ந்த சேகர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். காலை 8 மணி அளவில் கோ.பூவனூர் ரெயில்வே கேட் அருகே வேன் சென்றது. அப்போது […]

Loading

செய்திகள்

கோவை அருகே ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள்: சென்னை ரெயிலை கவிழக்க சதியா?

கோவை, ஆக. 25– கோவை அருகே ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கோவை வழியாக சென்னை வந்து கொண்டிருந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவாரம்பாளையத்தை கடந்த போது தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட‌து தெரியவந்தது. இதில் ரெயில் சக்கரம் ஏறியதில் சிமெண்ட் கற்கள் உடைந்து சிதறியது. இந்த சிமெண்ட் கற்களால் அதிர்ஷ்டவசமாத ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரெயில் தண்டவாளத்தில் […]

Loading