செய்திகள்

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வாஷிங்டன், ஆக. 30– அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால், கூடுதலாக […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உயர்வு: தங்கம் ஒரு சவரன் ரூ.76,960

சென்னை, ஆக. 30– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் சில நாட்களாக தங்கம் விலையில், ஏற்ற இறக்கம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,405 ரூபாய்க்கும் சவரன் 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி, ஆக. 30-– வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ணக்கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரைசாலை, ஆரியநாட்டுத்தெரு […]

Loading

செய்திகள்

‘‘ஜப்பான் தொழில்நுட்பம் – இந்தியத் திறமை இணைந்தால் தொழில்நுப்ப புரட்சி’’: மோடி உறுதி

டோக்கியோ, ஆக. 29– ‘‘உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும்’’ என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அந்நாட்டின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து மோடி வெளியிட்ட […]

Loading

செய்திகள்

இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன்: பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி, ஆக. 29– இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேசமாட்டேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே ஆயுத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணி ஒருபக்கம், அதிமுக கூட்டணி ஒரு பக்கம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் மறுபக்கம் முனைப்பு காட்டி வருவதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக சுழன்று […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஆக. 29– சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழாஇன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி அடுத்தமாதம் 8–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மட்டும் 31–ந் தேதி, செப்டம்பர் 1, 7, 8–ந் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் இன்று ரூ.76 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, ஆக. 29– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறைந்து, பின்னர் கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத […]

Loading

செய்திகள்

உத்தராகண்டில் 2 இடங்களில் மேகவெடிப்புp சிக்கி தவிக்கும் குடும்பங்கள்; மீட்பு பணி தீவிரம்

டேராடூன், ஆக. 29– உத்தராகண்டில் சாமோலி, ருத்ரபிரயாக் ஆகிய இரண்டு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி, மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உத்தராகண்டில், இதுவரை 270க்கும் மேற்பட்டோர் […]

Loading

செய்திகள்

ஐஎம்எப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் நியமனம்

புதுடெல்லி, ஆக. 29– சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் […]

Loading

செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை வாங்காதே: இந்தியாவிற்கு 25% வரி குறைப்பிற்கு நிபந்தனை

வாஷிங்டன், ஆக. 28– ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை ‘மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது […]

Loading