செய்திகள்

தங்கம் ஒரு சவரன் 78 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, செப்.2– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 9,705 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

புதுடெல்லி, செப் – 2 வடமேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வடக்கு வங்கக்கடலில், இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையலாம். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் […]

Loading

செய்திகள்

விருகம்பாக்கத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை: 3 பேர் கைது

சென்னை, செப். 2– விருகம்பாக்கம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், தனிப்படை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் […]

Loading

செய்திகள்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை: இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

புதுடெல்லி, செப். 2– சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருகிறார். சிங்கப்பூர்–இந்தியா ராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் வோங் பங்கேற்கிறார். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி மதிய […]

Loading

செய்திகள்

‘பஹல்காம்’ தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்

பீஜிங், செப்.1– ”பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்” என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர். அவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குழு […]

Loading

செய்திகள்

ஆசிரியர் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, செப்.1– ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா […]

Loading

செய்திகள்

உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுமாறு எம்.பி. சசிகாந்துடன் ராகுல்காந்தி தொலைபேசியில் பேச்சு

சென்னை, செப்.1– உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுங்கள் என்று சசிகாந்த் செந்தில் எம்.பி.யை ராகுல்காந்தி தொலைபேசியில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து […]

Loading

செய்திகள்

10 நாட்களில் ரூ.3,120 உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.77,640

சென்னை, செப்.1– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன் […]

Loading

செய்திகள்

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? : அன்புமணி கண்டனம்

சென்னை, செப்.1– அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், தி.மு.க. மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

Loading

செய்திகள்

பெசன்ட்நகரில் வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி : கலெக்டர் அறிவிப்பு

சென்னை, செப் 1– தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், – பெசன்ட்நகர் கோட்டம் ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒதுக்கீடு பெற்ற மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்திற்காக விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்தும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியினை ஆண்டிற்கு […]

Loading