செய்திகள்

மதுரை வடக்கு தொகுதியில் கூட்டமேடைக்கு 2 கி.மீ. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார்

மதுரை, செப்.3– ’’மதுரை ஊழல் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம், மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றிய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக மதுரை, கே.புதூர் அழகர் கோவில் பிரதான சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “மதுரை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை. 2 கிமீ […]

Loading

செய்திகள்

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு:

திருச்சி, செப். 3– திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் அந்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டதால் 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு புதன்கிழமை காலை 4.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக இயந்திரக் கோளாறை சரி […]

Loading

செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ. 79 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை, செப். 3– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் இன்று பவுன் ரூ.78,440-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 29-ஆம் […]

Loading

செய்திகள்

அன்புமணி மீது நடவடிக்கை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் ஆலோசனை

விழுப்புரம், செப். 3– ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் […]

Loading

செய்திகள்

8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, செப். 3– இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக, 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் […]

Loading

செய்திகள்

‘‘விவசாயிகளின் விரோதி அமைச்சர் தங்கம் தென்னரசு’’: எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு

திருச்சுழி, செப்.2– காவிரி – குண்டாறு திட்டம், அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க மறுத்து விட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் நேற்று திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:– இரவு 10 மணி ஆனபிறகும் அண்ணா தி.மு.க. வை வெற்றி அடையச் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு: ஸ்டாலின் பேச்சு

சென்னை, செப்.2– இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஜெர்மனியில் 1–ந் தேதி அன்று நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகவும், நவீன உற்பத்தி, […]

Loading

செய்திகள்

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, செப். 2– சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகரில் ஆடிட்டர் விஜயராகவன் […]

Loading

செய்திகள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி, செப். 2– திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரிலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பிற்பகல் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மாவட்ட […]

Loading

செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடெல்லி, செப்.2– இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று முதல் 4-ம் தேதி வரை செமிகான் இந்தியா 2025 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:- நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். […]

Loading