செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

மதுரை, செப். 4– 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு, இது போன்ற பல்வேறு வரிவிகிதங்களை வைக்காதீர்கள் என்று அப்போதே நாங்கள் […]

Loading

செய்திகள்

கழுகு மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து

அமராவதி, செப்.4– விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கழுகு மோதியது. இதனையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது, அதன் மீது கழுகு மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப். 4– அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பா.ஜ.க.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர், அண்ணா தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, செப். 4– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Loading

செய்திகள்

அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்:- மீறினால் ரூ.3000 வரை அபராதம்

சென்னை, செப். 4– சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.3000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த […]

Loading

செய்திகள்

நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை, செப். 4– மின்வாரிய ஊழியர்களின் தவறு காரணமாக நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவர் தனது […]

Loading

செய்திகள்

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி; சென்னையில் இன்று 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை, செப். 4– வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடபழனி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. தியாகராய நகரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கெமிக்கல் நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை […]

Loading

செய்திகள்

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்: 2 அடுக்குகளில் மட்டுமே வரி

புதுடெல்லி, செப்.4-– டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி […]

Loading

செய்திகள்

தெரு நாய் பிரச்சனை: தீர்வு கூறிய கமல்ஹாசன்

சென்னை, செப். 3– தெருநாய் பிரச்சனைக்கு கமல்ஹாச் தீர்வு கூறியுள்ளார். நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை […]

Loading

செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூர், செப். 3– சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உராய்வின் காரணமாக […]

Loading